அத்தியாயம் 43

4.3K 187 79
                                    

    அனைத்திற்கும் காரணம் வருணும் சிவாவும் தான் என தெரிந்து கொண்ட பிரபாவும் மோகனும் அவர்கள் மேல் மிகவும் கோபம் கொண்டனர். ஆனால் காயத்ரி அவர்களை சமாதானப்படுத்தி அவர்கள் இருவரும் சூழ்நிலைக் கைதிகள் என புரிய வைத்தாள். முதலில் அதை புரிந்துக் கொண்ட மோகன் பிரபாவை தேற்ற அவனும் புரிந்து கொண்டான்.

      பிறகு வருணிடம் சென்ற இருவரும் அவன் மனதை மாற்றினர். ஆனால் அதற்கு முன்பே வருண் தான் செய்த தவற்றை உணர்ந்து இருந்தான். இத்தனை வருடங்களாக பழகிய கார்த்தி அவனை அடிக்கும் போது தன்னால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரபாவே அவனை காத்து மருத்துவமனையில் சேர்த்து இருந்தது அவனுக்கு தான் பிரபாவிற்கு இழைத்த அநியாயத்தை உணர வைத்தது. மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினான்.

    " இந்த நேரத்துல நீங்க இரண்டு பேரும் இங்க என்ன பன்னரீங்க..." என்று கேட்ட குரலுக்கு என்ன பதில் கூறுவது என தெரியாமல் இருவரும் முழித்தனர்.

   " கார்த்தி... என்ன ஆச்சு. எதாவது பிரச்சனையா..." அந்த குரல்.

     "அதுவந்து...." என கார்த்தி இழுக்க இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த சிவா "ஆமாங்க... ஒரு பெரிய பிரச்சனை... என்னால... உங்களுக்கு..." என்றான்.

    "என்ன சொல்லரீங்க... உங்களால எனக்கு என்ன பிரச்சனை..." என கேட்க அனைத்தையும் கூறினான் சிவா.

     "கார்த்தி இவ்வளவு தானா... இதுக்கு போய் இவ்வளவு சீன் போடரீங்க... இப்போ பவிக்கு ஒன்னும் இல்லல்ல... ப்ரியாவிடுங்க... பியூச்சர்ல நான் எந்த காரணத்தை கொண்டும் பவிய எதுவும் சொல்லமாட்டேன்... போதுமா...." என சிரித்தவன் "பவிய நான் எக்காரணத்தை கொண்டும் மிஸ் பன்ன விரும்பல... எப்படி பட்ட சூழ்நிலை வந்தாலும் அவள நான் கைவிட மாட்டேன். எனக்கு அவள என்னுடைய அக்கா கல்யாணத்துல பார்க்கும் போதே ரொம்ப பிடிச்சிபோச்சி... அவள தான் கல்யாணம் பன்னிக்குவேன்னு ஒரு வருஷமா என்னுடைய வீட்டுல போராடன எனக்கு என்னுடைய மனைவி தூய்மையானவதான்னு போராட தெரியாதா..." என சக்தி கூற இருவரும் ஆனந்தம் அடைந்தனர்.

    "ரொம்ப தேங்க்யூ பாஸ்... நாங்க என்ன சொய்யரதுன்னு ரொம்ப குழம்பிகிட்டு இருந்தோம். இரண்டு மணி நேரமா என்ன பண்ணரதுன்னு முழிச்சிட்டு இருந்த எங்களுக்கு இரண்டே நிமிஷத்துல ஒரு முடிவு சொல்லிட்டீங்க..." என கார்த்தி சிவாவை கட்டி அணைத்தான்.

    "ஆமா அந்த போட்டோசலாம் என்ன பன்னீங்க. ஏன்னா என்னுடைய அப்பா அம்மா கண்ணுல மாட்டுச்சினா அப்புறம் இன்னும் ஒருவருஷம் இழுத்துடுவாங்க... அதான் கேட்டேன்... எனக்கு இப்பவே பவிய கல்யாணம் பன்னிக்கனும் போல இருக்கு. ஏற்கனவே ஆறுமாசம் தள்ளிவச்சி இருக்காங்க..." என அவன் சலித்தபடி கூற அப்போதுதான் கார்த்திக்கு சுபாவின் போனில் இருக்கும் போட்டோவை கீர்த்தியிடம் அழிக்க வேண்டாம் என கூறியதும் வருணின் போனில் இருக்குமே எனவும் நினைவு வந்தது.

   " ஐயய்யோ... போச்சு..." என கார்த்தி தலையில் கைவைக்க சக்தியும் சிவாவும் புரியாமல் பார்த்தனர்.

     "கார்த்தி என்ன ஆச்சி... அதான் பரவ விடாமல் தடுத்துட்டீங்களே... அப்புறம் என்ன..."- சிவா.

     "இல்ல... வருண் போன்ல இருக்கும் இல்ல..." என கார்த்தி கூற "ஆமாம் அவன் எதாவது பன்னிட போரான்... சீக்கிரம் பிரபாவுக்கு கால் பன்னுங்க..." சிவா.

   கார்த்தி எவ்வளவு முயச்சித்தும் பிரபாவும் மோகனும் போனை எடுக்கவில்லை. ஏனெனில் இருந்த டென்ஷனில் அவர்கள் போனை தங்கள் அறையிலேயே விட்டுவிட்டனர். சரி என்று வருணிற்க்கு கால் பன்ன சுவிட்ச் ஆப் என வந்தது. எனவே கார்த்தி அங்கு நேரில் செல்வதாக கூறினான். எனவே மற்ற இருவரும் உடன் வந்தனர். காரில் சென்றுக் கொண்டு இருக்கும் போது கீர்த்திக்கு கால் செய்ய போகும்போது அவனின் மொபைல் சார்ஜ் இல்லாமல் உயிரிழந்தது.

   "ச்ச... சிவா உன்னுடைய மொபைல கொடு..." என வாங்கி கீர்த்தியின் நம்பரை அழுத்த பாதிக்குமேல் எண்கள் நினைவிற்க்கு வரவில்லை. மூளையை எவ்வளவு குடைந்தாலும் அது ஞாபகத்துக்கு வரவில்லை. தன் தாய் தந்தை மற்றும் லேன்லைன் எண்கள் மட்டுமே வந்தது. லேன்லைனுக்கு அழைப்பது நல்லது அல்ல என உணர்ந்து என்ன செய்வது என மற்ற இருவரிடமும் கேட்டான்.

   அவர்கள் இருவரும் வீட்டிற்கு நேரடியாக செல் என கூற இப்பொழுதே மணி நான்கு அறை ஆகிறது வீட்டிற்கு போவதற்குள் ஐந்து அரை ஆகிவிடும் சுபா எழுந்து விடுவாள் என வேறு ஐடியா கேட்டான். சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாய் சீக்கிரம் ஹாஸ்பிடல் போங்க... என்றான்.

உன் விழியில்...Where stories live. Discover now