அத்தியாயம் 35

4.1K 178 40
                                    

லட்சுமி மற்றும் ராஜேந்திரன் வந்து அங்கு நடைபெற்று இருந்த அலங்காரங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வரும் சத்தம் கேட்டு கீழே இறங்கிய அனைவரும் அவர்களை கட்டித்தழுவி வாழ்த்துக்களை பறிமாறினர். பிறகு சிறிது நேரத்தில் அவர்களும் கிளம்பி வர சென்றனர்.

கீர்த்திக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது இன்னும் அவளும் சுபாவும் ஆடை எடுக்கவில்லை என்று... இதை பிரபாவிடம் அவள் கூற அவளை கார்த்தியின் அறைக்கு அழைத்து சென்றவன் இரு கருநீலம் மற்றும் வெண்மை கலந்த லெகங்காக்களை நீட்டினான். அதை பார்த்து வியந்தவள் அவனை பாராட்டினாள். ஆனால் இதை கார்த்தி தான் மதிய வேலையில் ஆடர் செய்ததாக கூற தன் அண்ணனை மெர்சித்தவள் சுபாவை தேடி சென்றாள். பிறகு சுபா கீர்த்திக்கு அதை கட்டிவிட்டுவிட்டு தானும் கட்டிக்கொண்டாள். கீர்த்திக்கு லெகங்கா அணிவது முதல் முறை என்றாலும் சுபாவிற்க்கு பழக்கமானதே. அவள் பள்ளி விழாக்களிலேயே பலமுறை அணிந்து இருக்கிறாள் எனினும் அவளுக்கு தான் தற்போது தயக்கமாக இருந்தது.

அனைவரும் வர வீடே கலைகட்டியது. அனைவரும் மிடுக்குடன் திரிய கார்த்தியும் பிரபாவும் மட்டும் வேலை பளுவினால் காலையில் அணிந்த ஆடையுடன் கலையிழந்து காணப்பட்டனர்.

"டேய் அந்த எரும மோகன் எங்கடா போயிட்டான்... அவன்கிட்ட கேக் கேட்டு இருந்தேனே. என்னதான் பன்னரானோ... டைம் ஆகிடுச்சி இன்னும் வரல..." என தன் நண்பன் கார்த்தியிடம் புலம்பிக்கொண்டு இருந்தான் பிரபா.

"மச்சி நானே கூலா இருக்கேன் உனக்கு என்னடா... " என கார்த்திக் சிரிக்க "டேய் இப்போ நான் உணவுத்துறை அமைச்சர். என்னுடைய வேலையை சரியாக செய்யனும் இல்ல..." என பிரபா கண்ணடித்து கூற அவனுக்கு பதில் எதுவும் கூறாமல் அப்படியே மலைத்து நின்றான் கார்த்தி.

"டேய் கார்த்தி... என்னடா ஆச்சி..." என பிரபா அவனை உலுக்கி சுய நினைவிற்கு கொண்டு வர "அங்க பாருடா... தேவதை மாதிரி இருக்கா..." என படியில் இரங்கி வந்து கொண்டு இருந்தவளை பார்த்து தன் நண்பனிடம் கூறினான்.

உன் விழியில்...Donde viven las historias. Descúbrelo ahora