"சிவா.... நீ இந்த நேரத்துல இங்க என்ன பன்னர.... எதாவது பிரச்சனையா..." என வேகமாக மருத்துவமனையை விட்டு வெளியே சென்றுக்கொண்டு சிவாவை தடுத்து காயத்ரி பரிவாக கேட்டாள்.
"நீ என்ன இங்க..."- சிவா.
" என்னுடைய தாத்தாக்கு ஆட்டடாக். நான்தான் அவரு கூட நைட் ல்டே பன்னரேன். நீ போரத பார்த்தேன். அதான் வந்தேன். எதாவது ப்ராப்லமா... எதுவா இருந்தாலும் சொல்லு. யாருக்கும் ஒன்னும் இல்லையே..." என ஆதரவாக அவள் கேட்க அவளை பார்த்தவன் தன் மனதில் இருக்கும் அனைத்தையும் கொட்டித் தீர்த்தான். தான் செய்த தவறையும் கூற காயத்ரிக்கு முதல்முறை அவன் மேல் வெறுப்பு வந்தது.
தன் காதலை புரிந்து கொள்ளாததால் எப்போதும் சிவாமேல் அவளுக்கு கோபம் வந்தது இல்லை. சுபாவின் மேல் மட்டுமே வந்தது. ஆனால் இப்போது அவனை வெறுத்தாள். வருணை பிறகு பார்த்துக்கொள் இப்போது கார்த்தியிடமும் பிரபாவிடமும் நடந்த அனைத்தையும் கூறிவிடு என வற்புறுத்த அதை அவன் ஏற்றான்.
வருண் இவ்வாறு செய்திருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என நினைத்து அவன் அறைக்கு கார்த்தி செல்ல அவன் அங்கு இல்லை. எனவே தேடிக்கொண்டு வெளியே வர கார்த்தியை பார்த்த அவன் வேகமாக காரில் ஏறிக்கொண்டு இருந்தான். ஏனெனில் அப்போதுதான் பவித்ரா கையை கிழிந்து கொண்டது அவனுக்கு தெரிந்தது. அவன் அவ்வாறு தப்பிக்க நினைத்ததே அவன் தான் எல்லா தவற்றுக்கும் காரணமானவன் என்பதை உணர்தியது கார்த்திக்கு. வேகமாக சென்றவன் அவனை கேள்விகள் எதுவும் கேட்காமல் நேரடியாக அடிக்க ஆரம்பித்தான். வருணிற்க்கு விழுந்து கொண்டு இருக்கும் அடிகளை தடுக்க பாடுபட்டு களைத்து போனான் அப்போதுதான் அங்கு வந்து நடந்துக்கொண்டு இருப்பதை பார்த்த பிரபா. ஒருகட்டத்தில் வருண் நிலைகுளைந்து போக பிரபா கார்த்தியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்து அவனை விளக்கினான்.
உண்மை அறியாத பிரபா வருணை எழுப்பி கைத்தாங்கலாக அழைத்து வந்து காரில் அமர வைத்துவிட்டு கார்த்தியிடம் ஏன் இவ்வாறு காட்டுமிரான்டித்தனமாக நடந்து கொள்கிறாய்... என கேட்டுவிட்டு அதற்கு அவன் பதில் அளிக்கும் முன்னரே காரில் மருத்துவமனைக்கு பறந்தான். கார்த்தி தான் யூகித்தவற்றை பிரபாவிற்க்கு புரியவைக்கும் நிலையில் இல்லை. கோபம் அவனை முழுமையான ஆக்கிரமித்து இருந்ததால் அவனால் எதுவும் பேசமுடியவில்லை. அப்படியே அங்கு அமர்ந்து வருணை பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.