அத்தியாயம் 34

4.7K 179 36
                                    

   "கார்த்தி இப்போ என்னதான் ப்ளான்..." என்று கீர்த்தி கேட்கவும் முதலில் போட்ட பிளான் தான் என நினைத்தவன் "என்ன பன்னலாம்... நீயே சொல்..." என்று கார்த்தி சொல்ல கீர்த்தி சுபாவிடம் கேட்டாள்.

    "ஒன்றும் இல்லை. நாம் நினைத்தபடியே பாட்டு பாடலாம். கித்தார் வாசிங்க... டேன்ஸ் ஆடுங்க... பாட்டுக்கு நான் ஒருத்தியே போதும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் பார்ட்டியை என்ஜாய் செய்யுங்கள்..." என்றாள் சுபா.

    "பட் சுபா நீ ஆடாமல் எப்படி...." என கீர்த்தி கூற "கீர்த்தி இந்த டான்ஸ்லலாம் எனக்கு விருப்பம் இல்ல. பாட சொல்லறயா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பாடுகிறேன்... எனக்கு பாட்டு ட்ராமா தான் பிடிக்கும்..." என்று சுபா கூறியதை கேட்டவுடன் கார்த்தி திட்டமிட ஆரம்பித்தான்.

    "நாம் ட்ராமா போட்டால் என்ன..." கார்த்தி.

     "கார்த்தி நாம் என்ன சின்ன பசங்களா... ட்ராமாலாம் போடரதுக்கு..." என சிரித்தாள் கீர்த்தி.

    "ஏய் லூசு தங்கச்சி யார் சொன்னது ட்ராமாலாம் சின்ன பசங்கதான் போடுவார்கள்ன்னு. ஒரு நியூஸ்ஸ மத்தவங்ககிட்ட சேர்க்கரதுக்கு பயன்படுத்த படர முதல் விஷயம் ட்ராமா தான். பேசரதுனாலயோ பாடரதுனாலயோ கிடைக்கிற பயன்களை விட ட்ராமானால கிடைக்கிற  பயன்தான் ரொம்ப அதிகம். மறக்க முடியாததும் கூட.  சோ நாம் ட்ராமா போட்டே ஆகனும்...." என கார்த்தி கூறி முடிக்கவும்  பிரபா அங்கு வரவும் சரியாக இருந்தது.

     "ட்ராமா போடப்போரீங்களா... நாம் என்ன சின்ன பசங்களா..." என அவனும் கூற "ஐயோ பிரபா... கார்த்தி மறுபடியும் அறுக்க ஆரம்பிச்சுட போறான்..." என்று கீர்த்தி கூற கார்த்தி அவளை முறைத்தான்.

    "அண்ணா அது ஒன்றும் இல்ல... ட்ராமா போட்டால் நாம் சொல்ல வருவது மத்தவங்கள சீக்கிரம் போய் ரீச்சாகும்னு சொல்லராரு..." என சுபா பிரபாவிடம் கூற "கரட்... நான் சொன்னதை சூப்பராக புரிஞ்சிகிட்ட... குட்டிமா... கத்துக்கோ..." என அவளை பாராட்டினான்.

உன் விழியில்...Kde žijí příběhy. Začni objevovat