அவ்வறை முழுவதும் +2 அரையாண்டு தேர்வுக்கான பரபரப்பு...
ஆனால் அங்கு நான்கு ஜோடி கண்கள் மட்டும் அமைதியே மறுயுருவாய் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்...
உயிரியல் தேர்வுக்கான வினா தாள்
அனைவருமக்கும் அளிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது...மாணவர்களுக்காக போடப்பட்டு இருந்த கடைசி வரிசையின் இரும்பு பெஞ்சில் கிழக்கும் மேற்குமாக இரு தூயவுள்ளங்கள் வெவ்வேறு பாடப்பிரிவில்...
நானோ கணித அறிவியல் பிரிவு...
அவளோ தூய அறிவியல் பிரிவு...போது பிரிவாக உயிரியல்...
நானோ முதலில் தெரிந்த தாவரவியல் படத்தை எழுதினேன்...
அவளோ சில வார்த்தைகள் வாயில் விளங்காமல் இருக்கும் விலங்கியல் படத்தை எழுதினால்....
அவள் விலங்கியல் படத்தை எழுதியதை பார்த்ததால் தன் நான் தாவிப்போய் தாவரவியல் எழுதினேன்...
என் மனத்திற்குள்ளே வில்லங்கமை
சிறு யோசனை...அவளும் என்னை பார்த்ததால் அவள் கண்களில் ஏதோ ஒன்று ...
இவள் என் இனம் போல் ஒரு தேடல் என்கண்களிலும் ...
சிந்தனைகளை விட்டேன் கடந்து செல்லும் மணித்துளிகளை என் கருத்தில் கொண்டு
கனநேரம் கூட தாமதிக்காமல் அவள் யாரென்று தெரியதப்போதும் அவளிடம்...😁😁😁..." நான பாட்னி பேப்பர் தரேன் நீ ஜீவாலஜி
பேப்பர் தரிய " ...😊😊😊கண்ணிமைக்கும் நொடிகளில் எங்களின் விடைத்தாள் மாற்றப்பட்டது எங்கள் நட்புக்கு துளிர் விட்டது...
பின் ...
அவ்வப்போது அவளை பள்ளி வளாகத்தில் காண்பேன் சின்ன சிரிப்போடு...
மாதங்கள் கடந்தன ...
கல்லூரி முதலாமாண்டு கணிணியறிவியல் முதல் நாள் எல்லாம் ஆங்கிலம் என்ற பயத்தில் மனதில் எழுந்த புரியப்படாத மத்தாப்பு சத்தம்....
மூன்றும் வரிசையில் ஓய்யாரமாய் அமர்ந்து இருந்தும் ...
முதல் வரையிலே என் சிங்காரக்கண்கள் ...😘😘😘
அவளை இனம் கண்டு செல்லச்சிரிப்பு சிரித்தான...
இவள் என் இனமாட என்று...அன்று மீண்டும் எங்களுக்குள் நட்பு...
ஆலமர வேர் போல் எங்கள் மனதில் வளர்ந்தது...
மூன்று வருடம் சொர்க்கமாய் சென்றது...வகுப்புத்தேர்வுகளில் எங்கள் சேட்டைகளும் வளர்ந்தன...
மண்ணுக்கு மழை சாரல்
எப்படி அச்சாரமோ
அதுபோல எங்கள் நட்பில் நாங்கள் கடந்து வந்த ஒவ்வொரு நொடிகளும் எங்கள் மனதில் இன்று வரை மறக்க முடிய அச்சாரமாய் இருக்கின்றன...