நிலா...45

15 1 1
                                    

ஏக்கம் :

என் கண்களில்
தானடி உன்மீது
எத்தனை எத்தனை
ஏக்கங்கள்...

நான்
உண்ண சோறுமில்லை
எனக்கு உணவூட்ட
என்னருகில் நீயுமில்லை ...

நீயில்லாமல்
நானுமில்லை
என்னேருகத்தில் நீயுமில்லை ...

பட்டினிகள் பலநாள்
கண்டேனடி பாவி
நீ கைவிட்டதில்
இருந்து ...

நீ செய்த பிழையால்
பிழையேதும் செய்யாமல்
உன்னுள் வந்தேன்...

பத்து மாதமெதனடி 
உன்னில் இருந்தேன்
பாதுகாப்பாய் ...

பின் ?

நான் பட்ட பாடுகள்
எத்தனையோ என்றுதான் 
உனக்கு தெரியுமா ?

உடுத்த உடையுமில்லை
ஒரு உடுப்பு
வாங்கித்தர எனக்கு
ஒரு நாதியும் இல்லை...

இச்சையாய் கேட்டேனடி
சிலரிடம் ...

பின் ...

பிட்சையாய் கேட்டேனடி
பலரிடம் ...

நீ ஊட்டாத
ஒருவாய் சோற்றுக்கு
நாயாய் ...

நிலாவின் கவிதைகள்Where stories live. Discover now