கருப்பு வெள்ளை
படம் போல்
ஏனோ
என்மனம் ஆகிவிட்டது ...காதல் கொண்ட மனம்
நீயில்ல தருணங்களில்
நடுஜமாத்து இரவில்
ஆளில்லா காட்டில்
தனித்து விடப்பட்டது
போல் ...என்மனம் எங்கும்
தனிமையின்
இருள் கருமையாய்
வாட்டுவது ஏனோ ...?உன்முகத்தை
காணும் வரை இருக்கும்
என்மனதின் இருள் ...முழு நிலவாய் ...
உன்னை கண்டபின்
பிரிவின் ஏக்கமும்
உன்னை பார்த்தபின்
என்முகத்தில் வெட்கமும்
மாறிமாறி ...என்னை ஆட்கொள்வது
ஏனோ ... ?