மித்ரா ஆபிஸில் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது மஞ்சு மித்ராவிடம்.. "மித்ரா.. கவின் சார் உன்னை கூப்பிடுறாங்க.."என்றாள்.
"சரி.. நான் போய் பார்க்கிறேன்.."என மஞ்சுவிடம் பதிலளித்து விட்டு.. மித்ரா கவினின் அறைக்கு சென்றாள்.
"உட்காருங்க மித்ரா.."என்றான் கவின்.
"தேங்க் யூ சார்.."என்றபடி உட்கார்ந்தாள் மித்ரா.
"மித்ரா.. ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட் இது.. இதோட பொறுப்பை நான் உங்ககிட்ட ஒப்படைக்கலாம்னு நினைக்கிறேன்.." என கவின் சொல்ல எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள் மித்ரா.
"ஆதி group of industries அவங்களோட 25th year செலிப்ரேட் பண்ற eventக்கான proposal கேட்ருக்காங்க. அது அவங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு வருஷத்துக்கான அவங்களோட events எல்லாம் நாமளே மேனேஜ் பண்ணலாம்.."என கவின் சொன்னான்.
"Oh.. its a great offer sir.. but.. நான் எப்டி.."என மித்ரா இழுத்தாள்.
"நீங்க betterஆ பண்ணுவீங்கனு நம்புறேன்.. அதான் நான் இதை உன்கிட்ட ஒப்படைக்கிறேன்.."என கவின் சொன்னதைக் கேட்டதும் மித்ரா சரியென ஒப்புக்கொண்டாள்.
கவினிடம் தனக்கு தேவையான விவரங்களை கேட்டுக் கொண்டு மித்ரா தன் வேலையை பார்க்கலானாள்.
பத்து நாட்களுக்கும் மேலாக கடந்திருந்தது.
மித்ரா தன் வேலையை சிறப்பாக செய்து முடித்திருந்தாள். கவின் ஆதி group of industriesல் இருந்து வரும் பதிலுக்காக காத்திருந்தான்.
மித்ராவின் சந்தோஷத்தை பார்த்த சாரு.. "என்ன மித்ரா.. திரும்பவும் உன் ராஜகுமாரன பார்த்தீயா.."எனக் கேட்டாள்.
"அதெல்லாம் ஒன்னுமில்லை.. கார்த்திக்கு போன் பண்ணிருந்தேன்.. அவனுக்கு எக்ஸாம் ஆரம்பிச்ச பிறகு அப்பா குடிக்கலைனு சொன்னான்.. அதான் சந்தோஷமா இருக்கேன்.."னு மித்ரா சொன்னாள்.
"ஹே.. சூப்பர்ல.. அப்டியே உன் ராஜகுமாரனும் வந்து சேர்ந்துடணும்.."என சொன்ன சாருவின் குழந்தைத்தனத்தை எண்ணி சிரிப்பு தான் வந்தது மித்ராவுக்கு.
ŞİMDİ OKUDUĞUN
தொடுவானம்
Genel Kurguகனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..