ஹேமாவின் முயற்சி
சுவாதி தன் வீட்டிற்கு சென்று கதிர் மீது உள்ள கோபத்தில் சுந்தரிடம் மன்னிப்பு கேட்டு அவனோடு மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினாள்...
கதிர் கோவிலிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு பைக்கை எடுத்து சென்றான்.. நவீன் மற்றும் ஹேமாவும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர் ..அப்பொழுது கதிர் தன்னுடைய அறைக்குச் சென்று கதவை டமார் என்று அடைத்து விட்டு தனது பெட்டில் போய் உட்கார்ந்தான்.
அப்பொழுது அவனுடைய அலமாரியில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து அதைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தான்.பிறகு அந்த போட்டோவை பார்த்து பேசத்தொடங்கினான்..
நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு தெரியுமா?? ஆனா என்னை இப்படி பேச வச்சிட்டியே?? எல்லாம் உன் நல்லதுக்கு தான்..என்னால் உனக்கு எவ்வளவு கஷ்டம்.. நீ இல்லாத லைஃப் என்னால நெனச்சு பாக்கவே முடியல.. எனக்கு நீ வேணும் நிலா..என்று நிலாவின் போட்டோவை பார்த்து பேசினான்...
அதே சமயம் ஹேமாவும் நவீனும் அங்கே வர கதிர் பேசிக் கொண்டிருந்ததை கதவைத் திறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்..அவர்கள் நிலாவுக்கு கால் செய்து கதிர் பேசுவதைக் கேட்கும்படி கூறினர்...
கதிர் அவர்கள் நின்றதைக் கவனிக்காமல் மறுபடியும் பேசினான்.."என்னை இந்த உலகம் என்ன சொல்லும் என்று நினைச்சு உன்னை காயப்படுத்திட்டேன்... காலேஜ் படிக்கும்போது சுவாதியை உண்மையா லவ் பண்ணேன்.. அப்புறம் இரண்டாவது காதல் எப்படி வரும்??வந்தாலும் அது உண்மையானதாக இருக்குமா?? இப்படியெல்லாம் எனக்குள்ளே நிறைய கேள்விகள் இருக்குது நிலா.
ஆனா ஒன்னு நிலா..சுவாதி எப்போ என்ன விட்டுட்டு போனாலோ, அப்பவே எனக்கு அவள் மீதுள்ள காதலும் கண்ணீருடன் கரைந்து போனது.. அவ மேல உள்ள நம்பிக்கையும் போச்சு .
அவள மறந்துட்டு ஒரு புது வாழ்க்கை உன்னோடு வாழத் தொடங்கும் போது தான் நீ மறுபடியும் அவளை என் முன்னால் கொண்டு வந்தாய்.. அப்பொழுது உன்கிட்ட என் லவ்வ எந்த முகத்தை வச்சு சொல்றது.எனக்கு அப்போ தைரியம் இல்லை. அதுக்கு காரணம் நான் ஏற்கனவே லவ் பண்ண பொண்ணு என் கூட இருக்கும் போது உன்கிட்ட நான் எப்படி லவ் பண்றேன்னு சொல்ல முடியும்.. அப்புறம் என் மேல ஒரு தப்பான அபிப்ராயம் உனக்கே வந்துவிடாது??
ВЫ ЧИТАЕТЕ
வானாகி நின்றாய்(Completed)
Любовные романыநமது கதாநாயகனுக்கு இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அன...