கதிரின் பரிசு

1.3K 63 15
                                    

பிறந்தநாள் பரிசு

மறுநாள் காலையிலேயே கதிர் எழும்பி கிளம்பினான்.. கல்லூரிக்கு சீக்கிரம் வந்தான்.. வகுப்பில் அனைவரும் கதிர் சுவாதிக்கு என்ன பரிசு கொடுக்க போகிறான் என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்க..

சுவாதி வகுப்பிற்குள் நுழைந்தாள்.. அனைவரும் அவளைச் சென்று வாழ்த்தினர்.நிலாவும் சக தோழியாக சென்று வாழ்த்துக்கள் தெரிவித்தாள்...
கதிர் அப்படியே அமைதியாக இருந்தான்.. சுவாதியின் ஃபிரண்ட்ஸ் அனைவரும் தங்கள் இடத்திற்கு சென்று அமர்ந்தனர்..

சுவாதியின் கண்கள் கதிரைப் பார்த்தது.. சுவாதி கதிரின் வாழ்த்துக்காக எதிர்நோக்கி காத்திருந்தாள்.. ஆனால் கதிர் அவளைப் பார்க்கவே இல்லை.. சுவாதி கதிர் தன் பிறந்த நாளை மறந்து விட்டான் என்று அவன் மீது கோபத்தில் இருந்தாள்..

மாலை கல்லூரி முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்றனர்..சுவாதி கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி தன் வீட்டை நோக்கி நடந்துச் சென்று கொண்டிருந்தாள்..

அப்பொழுது திடீரென்று ஒரு சம்பவம் நடந்தது.. யாரும் எதிர்பாராத சம்பவம் அது.. முகமூடி அணிந்த இரண்டு இளைஞர்கள் அவளின் வாய் மற்றும் கண்களை மூடி அங்கிருந்து இழுத்துச் சென்றனர்..சுவாதி "ஹெல்ப் ஹெல்ப்" என்று கத்தினாள்..

அவர்கள் சுவாதியின் கண்ணில் இருந்து துணியை அவிழ்த்து "பாஸ் நீங்க சொன்ன மாதிரி இந்த பொண்ண தூக்கிட்டோம்"..என்றனர்..

யார் அது?? என்று சுவாதி பார்க்க.. எதிரில் கதிர் தனது பைக்குடன் சிரித்தபடி திரும்பி நின்று கொண்டிருந்தான்..சுவாதி கதிரிடம் ஓடிச் சென்றாள்..."நீயா?? போடா பயந்துட்டேன்" என்று அவனை சுவாதி செல்லமாக அடித்தாள்..

சுவாதி கதிரிடம் "என்ன கதிர்?? இது என்ன விளையாட்டு.. இப்படியா விளையாடுவது, போடா லூஸ் பயந்துட்டேன்" என்று செல்லமாக திட்டினாள்.. உடனே கதிர் "இப்போது நீ எதுவும் பேசக்கூடாது அப்படியே என் கூட பைக்ல ஏறு" என்று சொல்ல..

வானாகி நின்றாய்(Completed)حيث تعيش القصص. اكتشف الآن