*விடியலை நோக்கி.....*
✍🏻சிறு கதை ஆக்கம்- Afaã
★பாகம்- 11★
Aizaa நினைத்தது போலவே... அந்த அழைப்பு மணி ஒலி... Zulaiha டீச்சரின் வீட்டிற்கு வந்த விருந்தாளியின் அழைப்பொலியாகவே இருந்தது....
Zulaiha டீச்சரரும் தன் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்த, தனது நாநாவின் மகனான Shaheen ஐ இன்முகத்துடன் வரவேற்று உள்ளே அழைத்து உரையாடலானார். Shaheen ஓ.... ஓர் வெளி நாட்டுக் கம்பனியில் software Engineer ஆக தொழில் புரியும் ஓர் இளைஞன் ஆவான். தனது நான்கு மாத விடுமுறையை கழிக்க நாட்டுக்கு வந்திருந்த Shaheen... தனது உறவினர்களையும் சந்தித்து விட்டு செல்லலாம் என்ற நோக்கிலேயே அன்றைய தினம் Zulaiha டீச்சரின் வீட்டிற்கு வந்திருந்தான்.பல வருடங்களுக்கு பின் Shaheen ஐ கண்ட ஆர்வத்தில் Zulaiha டீச்சரும், அவர் கணவரும் உரையாடலானார்கள்.... அவர்களின் சுவாரஷ்யமான உரையாடலுக்கு நடுவே.... "Shaheen....., என்ன குடிப்போம்....? டீ/ கோப்பி/ஜூஸ்???" என்ற கேள்வியை கேட்களானார்...Zulaiha டீச்சரின் கணவர்.
"ஹ்ஹ்ஹ்ம்.... இந்த டைம்ல, ஒரு இன்ஜி போட்ட ப்ளேன்டீ இருந்தா நல்லம் uncle..." என்று Shaheen கூறி முடிப்பதற்குள்.....
"Aizaa..... 3 ப்ளேன்டீ"என Zulaiha டீச்சரின் கணவர் சொன்னார்.
"யாரு uncle... Aizaa என்றது??? புதிதாக வீட்டு வேலைக்கு வந்து இருக்காங்களா?" என்ற Shaheen இன் கேள்விக்கு.... "ஹ்ஹ்ஹ்ம்" என்று தலையசைத்தவாறு, அவளின் மார்க்கப் பற்று மற்றும் கை வண்ணங்கள் உட்பட, அவள் கதையை அவளுக்கு கேட்காதவாறு சொல்லலானார் Zulaiha டீச்சரின் கணவர் . சில பகுதிகள் கூறும் போது அவரை அறியாமலேயே அவர் குரலொலி உயரவே....." கொஞ்சம் மெதுவா சொல்லுங்க...Aizaaட காதுல விழுந்தா கவல படுவாள்... இப்ப தான் அவள் கொஞ்சம் சரி சந்தோசமாக இருக்கிறாள்" என அவர் குரலொலியை தாழ்த்தினார் Zulaiha டீச்சர்.
Aizaaவின் கதையை கேட்ட Shaheenகும் கவலையாகத் தான் இருந்தது. அவளது கதையை கேட்கும் போது அவனுக்குள் Aizaaவின் கற்பனை உருவம் வரையப்படலாயிற்று....
இவ்வாறிருக்க....
Madam, Excuse me..... என ஓர் மெல்லிய குரல் சமையலறை பக்கத்திலிருந்து கேட்டது. அந்த அழகிய குரல் Aizaaவின் குரலாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்த shaheen.... சோfபாவில் அமர்ந்திருந்தவாறே, சற்று எட்டிப் பார்த்தான். அங்கே ஓர் அழகிய இஸ்லாமிய கன்னிப்பெண்... தனது இரு கைகளாலும் தேநீர் கோப்பைகள் அடுக்கப்பட்டருந்த தட் டை பிடித்தவாறு...சுவருக்கு மறைந்திருந்தாள். அது Aizaa தான் என்பது Shaheenக்கு புரிந்துவிட்டது. அவளை கண்டதும் shaheen ...இற்கோ என்றும் இல்லாதவாறு இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளலாயிற்று....
அவனை அறியாமலேயே அவன் Aizaaவின் மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்...."என்ன Aizaa அங்கேயே நின்டுடு இருக்கிற.... ப்ளேன்டீ ஆரிடும்...அவசரமாக..."
என்று கூறிய Zulaiha டீச்சரின் கணவரின் குரலொலியை கேட்ட உடனேயே தான் Shaheen சுய நினைவிற்கு வரலானான். பின்னர் Aizaaவும் அவள் கொண்டுவந்த இன்ஜி ப்ளேன்டியை தலையை குனித்தவாறே பரிமாறிவிட்டு உள்ளே சென்றாள்.
Aizaaவின் இன்ஜிப் ப்ளேன்டியை அருந்திய Shaheen நேரம் சரியாகவே, Zulaiha டீச்சரின் வீட்டிலிருந்து விடை பெறலானான்.
அவன் அங்கிருந்து சென்றாலும்,.அவனின்.உள்ளமோ Aizaaவின் நினைவுகளுடனேயே பிண்ணப்பட்டிருந்தது........தொடரும்.........
(Created by- Afaã)