*விடியலை நோக்கி......*
✍🏻சிறுகதை ஆக்கம்- Afaã
★பாகம்- 18★
Shaheen சொல்வதை கேட்ட Aizaaவிற்கோ..... என்ன சொல்வது என்றே புரியவில்லை.... இந்த விடயத்தை கூறி ஒரு முடிவெடுப்பதற்கோ....கலந்துரையாடுவதற்கோ... அவளுக்கு யாருமே இல்லை என்ற கவலை அதிகமாகவே வாட்டலாயிற்று.......
வுழூ செய்து விட்டு.....தன் இறைவனின் உதவியை நாடி ஓடோடினாள்.....
இஸ்திஹாரா தொழுதுவிட்டு அவளது இந்த மனக் குழப்பத்திற்கு சரியான முடிவை காட்டியருளும் படி இரு கரம் ஏந்தி பிரார்த்தித்துக்கலானாள்.
தனக்கு இவ்வாறே..... இறுதிவரை, தனியாக வாழ்க்கையை நகர்த்திச் செல்வது சிரமம் என்பதும், இஸ்லாமிய ரீதியில் ஒரு துணையை சேர்ப்பதில் எவ்வித தவறும் இல்லை என்பதையும் அவளது உள்ளமோ உணர்த்தலாயிற்று.......
அதனால் அவள் Shaheen ஐ அவளது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள உடன்பட்டாள்....
எனவே, Zulaiha டீச்சரரும், அவரது கணவரும் Aizaaவிற்கு வலீயாக இருக்க.... Shaheen இற்கும் Aizaaவிற்கும் இஸ்லாமிய ரீதியில் நிகாஹ் நடைபெற்றது.....
🎊 🎁🎁 🎊🎁🎁 🎊அந்த திருமண ஒப்பந்தத்திற்குப் பின்னர்....Aizaaவோ.... Shaheen இன் கரம் பற்றியவளாய் அவளின் விடியலை நோக்கிய இரண்டாம் கட்ட பயணத்திற்காக கடல் கடந்து செல்லலானாள்...............
🛫.....🛫......🛫......🛫
" Madam! Madam! Excuse me, can you please,help me to solve this sums" என ஒரு லண்டன் பாடசாலை மாணவனின் குரல்...... Professor Aizaaவை நிகழ்காலத்திற்குள் மீண்டும் பிரவேசிக்க வைத்தது.
"Yes my dear, coming......" என கடந்த கால நினைவுகளில் இருந்து தன்னை விடுதலை செய்து கொண்ட Aizaa...... தனது ஹிஜாபை சரி செய்தவளாய் அம் மாணவரை நோக்கி நடக்களானாள்.....
அவளது கால்கள் மட்டுமே அம் மாணவரை நோக்கி நடந்தன. உள்ளமோ அவள் கடந்து வந்த விடியலை நோக்கிய பயணத்தின் நினைவலைகளில்.........
முற்றும்................✍🏻
(Created by-Afaã)
This z my 1st attempt..... if any mistakes on this plz point out me.... & keep support me.......
Thank you very much all
4 ur kind co-operation😍😍😍😍😍😍😍