*விடியலை நோக்கி.....*
✍🏻சிறுகதை ஆக்கம்- Afaã
★பாகம்- 15★
Aizaa.... அவ் வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கோ முதற் கண் சிரம் தாழ்த்தி ஷூகூர் செய்தாள்...... எவ்வளவு நன்றி கூறியும் ஈடாகாது என்பதை அவள் உள்ளம் அவளுக்கோ.....அடிக்கடி நினைவுபடுத்தியது.
அல்லாஹ் அவளை கைவிடவில்லை.... "பொறுமையாளர்களுக்கு இறைவன் என்றுமே துணை" என்ற Aizaaவின் நம்பிக்கையோ வீண் போகவில்லை......
Aizaaவோ மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள்...
என்றும் இல்லாத பல புன்னகைகள் அவள் முகத்திற்கு மென்மேலும் அழகு சேர்த்தன.....இவ் வெற்றிக்கு பக்க பலமாக நின்ற Zulaiha டீச்சருக்கும் அவர் கணவருக்கும் அவள் கோடான கோடி நன்றிகளை பகர்ந்தாள்....
"Sir......Madam.....,,,, நீங்க ரெண்டு பேருமே எனக்கு செஞ்ச உதவிய நான் என் lifeல மறக்கவே மாட்டேன்.... இறைவனுக்கு அடுத்த படியா.... என்னுடைய இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் நீங்க ரெண்டு பேரும் தான்..... ஓங்கட வீட்டு பணிப் பெண்ணான எனக்கு நீங்க தந்த ஆதரவுக்கும், உதவிகளுக்கும் நான் என்ன கைமாறு செய்யவோ தெரியல்ல.... கட்டாயம் அல்லாஹ்வினிடத்தில் உங்களிருவருக்கும் நற் கூலி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்" என அவளது உள்ளத்தில் புத்துயிராக மலரப் பெற்ற முத்தான நன்றிகளை பொழியலானாள் Aizaa......
"நன்றி எமக்கல்ல Aizaa... நன்றி எமக்கல்ல!!!! அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கே" என்று தேற்றியவாறு Aizaaவின் வெற்றி வாகை ஆரவாரங்களை மட்டும் பங்கு போட்டுக் கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்....Zulaiha டீச்சரும், அவரது கணவரும்......
அது அவ்வாறிருக்க.........
Aizaaவின் பட்டப் படிப்பெல்லாம் பூரணமாகவே முடிந்துவிட்டது என்ற செய்தியோ பல திசைகளிலும் பரவலாயிற்று......
அச் செய்தியோ..........
லண்டனில் இருந்த Shaheen இன் செவிகளுக்கும் எட்டியது....
அச் சுப செய்தியை கேள்விப்பட்ட உடனேயே....
Shaheen ஓ.........அது என்னவோ அவனுடைய வெற்றி போலவே நினைத்து மகிழ்ச்சி மிகுதியால் சிறகடித்துப் பறக்கலானான்.......மேலும்,
ஒரு வார விடுமுறையில் Aizaaவை பார்க்கச் செல்லும் எண்ணத்தில் தன் தாய் நாடு நோக்கி திரும்பலானான் Shaheen.............
🛫🛬🛫🛬🛬🛬🛬🛫தொடரும்........
(Created by- Afaã)