*விடியலை நோக்கி......*
✍🏻சிறுகதை ஆக்கம்- Afaã
★பாகம்- 17★
Zulaiha டீச்சரின் வீட்டிற்கு வந்திருந்த shaheen ஓ...... அவனது உள்ளத்தில் பொதி கட்டி வைத்திருந்த சொற்றொடர்களை எல்லாம் Aizaaவிடம் சொல்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைக்கும் வரை அடிக்கடி தன் கைக் கடிகாரத்தை சரி பார்த்தவனாய் அங்குமிங்கும் நடந்த வண்ணம் இருந்தான்.....
இதை அறியாத Aizaaவும் தன் வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள்.........
திடீரென இடி இடித்து, மழை பொழிவதற்கான அறிகுறிகள் தென்படவே..... உலரவிட்டிருந்த துணிகள் Aizaaவின் நினைவிற்கு வரலாயிற்று....... அவளோ அதை எடுப்பதற்காக மொட்ட மாடிக்கு ஓடலானாள்.......
Aizaa மொட்ட மாடிக்கு செல்வதைக் கண்ட shaheenஉம்.... இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்கவே கிடைக்காது என்று எண்ணியவனாய்.....
Aizaaவை பின் தொடரலானான்........"Aizaa Madam ..... டீச்சர் ஆவிட்டீங்க எனா...இப்ப எல்லாம் ஒங்கள புடிக்கவே கஷ்டமா இருக்குது போல......" எனக் கலாய்த்தவாறு Aizaaவை ஒரு வழியாக பேச்சிற்கு இழுத்துக் கொண்டான் Shaheen.....
அவ்வாறு ஆரம்பித்த அவ்விருவரினதும் உரையாடல்கள் பல மணித்தியாலங்களுக்கு மேல் தொடரலாயிற்று.........
Shaheen....... அவனது மனதில் பல வருடங்களாக பொதி கட்டி வைத்திருந்த சொற்றொடர்களை எல்லாம் ஒவ்வொன்றாக Aizaaவிடம் கூறலானான்.............
அதையெல்லாம் கேட்ட Aizaaவிற்கோ..... பேச்சும் வரவில்லை.... மூச்சும் வரவில்லை. அவளது இதயத் துடிப்போ வழமைக்கு மாறாக அதிகமாகவே அடிக்கலாயிற்று......
"இங்க பாருங்க Aizaa.....ஒங்கள 1st time எப்ப meet பண்ணினேனோ....
அப்பவே இதெல்லாம் சொல்லனும் என்டு தான் இருந்தேன்.... ஒங்கட கனவுகளுக்கு எல்லாம் தடையாக இருக்க விரும்பல்ல....அதனால் தான் சரியான சந்தர்ப்பம் வரும் வரை இத்தனை நாளா....wait பண்ணிட்டிருந்தேன்".....
"மேலும், நான் ஐவேளை தொழுவேன், நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன், இறைவனுக்கு பயந்து நடந்து கொள்வேன், உங்கள அன்போடு கவனித்துக் கொள்வேன், இன்ஷா அல்லாஹ்! உங்கள சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் கணவனாக இருப்பேன், என்னை ஏற்றுக் கொள்வீங்களா Aizaa" என shaheen ஓ...... தனது மனதினுள் பொதி கட்டி வைத்திருந்த அவனது ஆசைகள், கனவுகள் எல்லாவற்றையும் கூறியதுடன் Aizaaவின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தான்.............
தொடரும்.........
(Created by-Afaã)