" என்னடா முழிக்கிற.. ஏதாவது பிரச்சனையா என்ன?"
என்று தீபக்கின் முகத்தை வைத்தே கேட்டான் ஷியாம் சுந்தர்.
" ஆமா சார் அந்த சஞ்சய் ரொம்ப இடைஞ்சல் கொடுக்கிறான்.. அதனால தான் இந்த காலேஜ் ப்ராஜெக்ட் டிலே ஆகுது .."என்று தீபக் கூற
"ஓ ...."
எனக் கூறியவன் தனது தாடையை தடவியப் படியே யோசிக்க ஆரம்பித்து விட்டான்." அவன் வீட்டில யார் யாரெல்லாம் இருக்காங்கன்னு சொல்லு..."
என்று சிறிது நேர யோசனைக்கு பின் ஷியாம் சுந்தர் கேட்க ஏற்கனவே தான் சேகரித்து வைத்து இருந்த தகவல்களை கூற ஆரம்பித்தான் தீபக் .
"அப்படினா அவன் பொண்ணை தூக்கிடு"
என அசால்ட்டாக முடித்து விட்டான் அவன்.தீபக்கோ அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டான். சஞ்சய்க்கு இரண்டு குழந்தைகள்.. முதலாவது பெண் குழந்தைக்கு இப்போது தான் வயது ஐந்து.
அவளைத் தான் இவன் கடத்த சொல்கிறான் .
"சார் ..அவ சின்ன பொண்ணு.."
என தயக்கமாக இழுத்தான். அவனும் ஒரு குழந்தையின் தந்தை தானே." அந்த சின்ன பொண்ணை சித்திரவதை பன்ற அளவுக்கு நான் ராட்சசன் இல்லை தீபக்.. அவனுக்கு பயத்தை காட்டணும்.. அதுக்கு தான்"
எனக் கூறி இடை நிறுத்தியவன் "அது மட்டும் போதாது.. அவன் பிசினஸையும் குளோஸ் பண்ணனும் ..அதற்கான வேலையும் ஆரம்பிச்சிடு இப்போ இருந்தே...ரைட்.."
என கூறினான் அழுத்தமாக.அவன் குழந்தையை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று கூறியதில் சற்று நிம்மதி பரவ அப்போதே அவர்களிடம் இருக்கும் ஒரு அடியாள் கும்பலுக்கு அழைத்து பேசினான் தீபக். மேலும் வாட்ஸ் அப் மூலம் சஞ்சையின்
மகளுடைய புகைப்படத்தையும் அனுப்பி வைத்தான்.அடுத்த நாள் பாடசாலை விடும் நேரம் அடியாட்கள் நாள்வர் குழந்தையை கடத்த காத்திருந்தனர் அந்த பாடசாலை முன் .
அதில் கொஞ்சம் பெரிய தலை "அதோ வருது பாரு அந்த குழந்தை தான்.."
என காட்டி விட்டு மீண்டும் ஃபோனில் ஐக்கியமாகி விட்டான்.மற்றவர்கள் அந்த புகைப்படத்தை பார்க்காததால் பெரிய தலை கூறியதும் திரும்பி பார்க்க அங்கு அவர்கள் கண்களுக்கு தெரிந்தது என்னவோ தான்வி தான்.
மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு
"தல அந்த பாப்பாவா?"
என கேட்டிட அவனும் ஃபோனில் கவனத்தை பதித்த படியே
"ஆமாடா ஒரு பையன் கூட பேசிட்டு வர்றா பாரு.." என்றான் அந்த பெரிய தலை.