உயிரின் தாகம் காதல் தானே..💔15

1.9K 40 8
                                    


அந்த அறையை விட்டு நர்ஸ் வெளியே சென்றதை உறுதிப் படுத்திக் கொண்ட சாத்விக் தங்கையின் பக்கம் நிதானமாக திரும்பி
"என்ன ஆச்சு ?
எதையுமே மறைக்காம என்கிட்ட சொல்லணும்.."
என்று கூறிட சிறிது நேரம் தயங்கியவள் அன்பு செல்வன் இங்கு அவளை அனுப்பியதில் இருந்து இன்று நடந்தது வரை கூறி விட்டாள்.

அண்ணனிடம் எதையும் மறைக்கும் எண்ணம் இருக்கவில்லை அவளுக்கு. காரணம் வயிற்றில் வளரும் குழந்தை .
அவள் சிலவற்றை மறைத்துக் கூறினால் குழந்தையின் தந்தை யார் என்ற கேள்வி வருமே.. அதனால் தான் ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி விட்டாள்.
இந்தக் குழந்தையை அண்ணன் எப்படி ஏற்றுக் கொள்வானோ என்ற பயம் அவளுல் இருக்கத் தான் செய்தது.. ஆனாலும் அண்ணனிடம் சொல்லியே  ஆக வேண்டிய கட்டாயம் அவளுக்கு இப்போது..

     சாத்விக்கின் கோபத்தை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது .
"எவ்வளவு தைரியம் இருக்கணும் அவனுக்கு.. அவனை  என்ன பண்றேன்னு பாரு.."
என கோபமாக அங்கிருந்து எழுந்து செல்ல போனவனின் கையைப் பிடித்து தடுத்த மதியழகி

"அண்ணா நீ நினைக்கிற மாதிரி அவர் சாதாரணமானவர் இல்லை. ப்ளீஸ் இப்படியே என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடு.. அவரோட போராட எங்க கிட்ட எதுவும் இல்லை ..
அவரை விட்டு என்னை தூரமா கூட்டிட்டு போ.. இனிமேல் எனக்கு இந்த குழந்தை மட்டும் போதும்.."
என்று பலவீனமான குரலில் கூற கோபம் உள்ளுக்குள் இருந்தாலும் இப்போது மதி சொல்வதை செய்வதே புத்திசாலித்தனம் என்று தோன்றியது அவனுக்கு.

இருந்தும் ஷியாம் சுந்தர் மேல் கட்டுக்கடங்காத கோபம் இருக்கவே செய்தது ஒரு அண்ணனாக .
"சரி வா போகலாம்.."
என்று அவளை அழைத்தவன் முன்னே நடக்க
"அண்ணா என்னால நடக்கக் கூட முடியல .."
என மெல்லிய குரலில் அவனை தடுத்து நிறுத்தினாள் மதியழகி.

அப்போது தான் தங்கையின் காலில் நேற்று அவன் சூடு போட்டதாக அவள் கூறியது நினைவு வந்து போனது.
திரும்பி அவள் அருகே வந்தவன் "அவன் கட்டுன தாலியை கழட்டி வச்சிட்டு என் தங்கச்சியா என் கூட வா.. ஒரு அண்ணனா உன்னை எப்பவுமே நல்லா பாத்துப்பேன்.."
என உறுதியான குரலில் கூற சற்றும் யோசிக்காமல் அவன் கூறியதை செய்தாள் பெண்ணவள்.

உயிரின் தாகம் காதல் தானே...Donde viven las historias. Descúbrelo ahora