ஷியாம் சுந்தருக்கு ஏனோ அன்று அந்த இரண்டு குழந்தைகளையும் கண்டதிலிருந்து தூக்கமே வரவில்லை.,
எந்த வேலை செய்தாலும் அந்த பிஞ்சு குழந்தைகளின் முகமே கண்முன் வந்து அவனது வேலைகளை செய்யவிடாமல் தடை செய்தது .தான்வி அவனது கைகளில் இதழ் பதித்த போது அவன் உணர்ந்த அந்த பிஞ்சு இதழ்களின் பரிசம், அவனைப் போலவே இருக்கும் ஆருத்தின் அழுத்தம் ,கம்பீரம் என்பனவே அவன் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றன.
ஆருத் தான்வி இருவரும் முக ஜாடையில் மதியழகியின் பெற்றோரைப் போலவே இருப்பதால் எளிதாக அவனால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
எனவே அடுத்து அவன் செய்தது அவர்களை பற்றி விசாரிக்க தீபக்கிடம் கூறியது தான்.தீபக் அன்று கனகாவை தூரத்தில் இருந்து கண்டதால்
அடுத்த நாளே அவரை பின் தொடர்ந்து வீடு வரை சென்றான் .
வீட்டை கண்டு பிடித்ததும் சில ஆட்களை நியமித்து அந்த இடத்தை நோட்டம் விடும் படியும் கூறி விட்டான் தீபக்.அதற்கு அடுத்த நாளே அங்கு இருப்பவர்களின் புகைப்படம் தீபக்கின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.
அதனை கண்ட தீபக்கிற்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது."வாட்..?
இது மதியோட குழந்தைங்களா? அந்தப் பையனை பார்த்தா நம்ம சாரோட குழந்தை மாதிரியே இருக்கே ...இது எப்படி சாத்தியம்? ஒருவேளை மதி வேறு கல்யாணம் கூட பண்ணி இருக்கலாம்.. நாம ஏன் அப்படி நினைக்கணும்.."
என்று தனக்குத் தானே கூறியவன் அவசரமாக தனது மனைவிக்கு அழைத்தான் .அவனுடையது காதல் திருமணம். அன்று மதியழகியை அனுமதித்த போது அங்கு இருந்த நர்ஸ் தான் அவன் மனைவி .
அன்று அவளை பார்த்த பிறகு அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று தோன்ற மீண்டும் மீண்டும் அந்த மருத்துவமனைக்கு சென்றான் தீபக்.
அவளிடம் காதலை கூறி அவளையே திருமணமும் செய்து கொண்டான் அவன்..இப்போது அவர்களின் காதலுக்கு சாட்சியாக ஒரு குழந்தையும் இருக்கிறது. மனைவி அழைப்பை ஏற்றதும்
" ஹனி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்.. நீ பிஸியா இருக்கியா ?"
என்றான் தீபக். அவனால் ஹனி என்று அழைக்கப்பட்ட ஹரினியும் "இல்லை சொல்லுங்க.." என்று கணவனின் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்து பேசினாள்.