🦚மனதை மயிலிடம் இழந்தேனே 🦚
🅔︎🅟︎🅘︎...26
மறுபக்கம்.....தேவராஜ் வீட்டில் இருந்து வெளியேறிய கெஷிக் தன் செல் போனில் இருந்து வடிவுகரசிக்கு Call செய்தவன்....
"பாட்டி.... அங்க என்ன எல்லாம் கூத்து நடக்குதுன்னு பார்த்தியா?... இதுக்கா நீ இவ்ளோ கஷ்டப்பட்டு அந்த குடும்பத்துல என்னையும் என் தங்கச்சியையும் மஹத் மித்ராக்கு சம்மந்தம் பேசி முடிக்க நினைச்ச?" என்று கெஷிக் கோவமாக கத்தினான்...
"டேய் பேராண்டி.... இங்க என்ன நடக்குதுன்னு எனக்கும் ஏதும் புரியல டா..... புதுசா அந்த ஆரூரன் பெயர் இங்க மறுபடியும் அடிப்படுது.... போதாக்குறைக்கு ஏதோ ஒரு அன்னக்காவடியை இந்த மஹத் கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கான்.... இதெல்லாம் எனக்கே ரொம்ப புதுசா இருக்கு டா" என்ற வடிவுகரசிக்கு மஹத்தின் செயல் கோவத்தை உண்டாக்கியது...
"எனக்கும் அதே நிலைமை தான் பாட்டி.... இந்த மஹத் நான் என்ன சொன்னாலும் கேக்குறவன்.... நேத்து நைட்டு நான் அந்த மயிலை பத்தி தப்பா பேசினேன்னு என்னை அடிக்க வந்துட்டான்" என்று கெஷிக் சொல்ல..
"டேய்... அவன் என் கழுத்துலேயே கத்தி வச்சிட்டான்.. ஹ்ம்.. நீயெல்லாம் எந்த மூலைக்கு" என்ற வடிவுகரசியின் மூளையில் இன்னும் சூடு குறையாமல் இருந்தது...
"இப்போ என்ன பாட்டி பண்றது?... அப்போ என் தங்கச்சிக்கும் மஹத்துக்கும் கல்யாணம் நடக்காதா?....அப்போ தேவராஜ் பாதி சொத்து அந்த மயிலுக்கு போக போகுதா?" என்ற கெஷிக்கின் கோவம் முழுதும் மயிழினி மேல் பதிந்தது.......
"டேய் டேய், நீ அவசரப்படாத.... நானெல்லாம் இந்த குடும்பத்துல என் மக வாழமணும்னு எத்தனை பேரோட உயிரை எடுத்து இருக்கேன் தெரியுமா...? ஹ்ம்.. இந்த மயில் எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை.... நீ கவலை படாத.... உன் தங்கச்சியை இந்த வீட்டு மருமகளா கொண்டு வரது தான் என்னோட முதல் வேலை.... சரி உன் அப்பன் எங்க இன்னுமா ஊருல இருந்து வரல? " என்று வடிவுகரசி கெஷிக்கின் அப்பா நாராயணனை பத்தி விசாரிக்க...
YOU ARE READING
🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚
Fanfiction😇😇யாருக்கு தெரியும்... தோன்றியதை எழுதுறேன்.....போற போக்குல நீங்க படியுங்கள் ...😇😇