இறகு 33

79 15 14
                                    

🦚மனதை மயிலிடம் இழந்தேனே 🦚

🅔︎🅟︎🅘︎...33

அக்கா நான் வண்டி எடுக்குறேன்.. நீ கதவை சாத்திட்டு வா போகலாம்" என்ற கமழினி தன் ஸ்கூட்டியை ரிவர்ஸ் சமயம்.....பின் நின்று இருந்த Audi காரில் இடித்து விட.......காரில் இருந்து.. கையில் பொக்கே உடன் வந்த மஹத் ......கோபத்துடன்....

"Hey Fool....அறிவில்ல உனக்கு.... காஸ்ட்லியான கார்ல இடிக்கிற...கண்ணு ரெண்டு என்ன தலைக்கு மேலயா வச்சுக்கிட்டு இருக்க??....இந்த கார் உடைய ரேட் என்னன்னு உனக்கு தெரியுமா?" என்று கேட்டவனின் முன்.... சுடிதார் ஷாளை இடுப்பில் கட்டிக்கொண்டு...
"டேய் பணக்கார பாதம் பருப்பு.... யாரை பார்த்து டா Foolன்னு சொன்ன....கார் வச்சிருந்தா நீ என்ன பெரிய மன்மதனா?"

என்று கமழினி கத்தும் சத்தம் கேட்டு.... மயிழினி வேகமாக வெளியே வந்து பார்த்தவள் கண் முன் கையில் பூங்கொத்துடன் நின்று இருந்தான் மஹத்...

"சொல்லு டா.... பணக்காரனா இருந்தா நீ என்ன பெரிய மைனரா...... ஆளையும் அவனையும் பாரு" என்று கமழினி எகுற...
"What.... வாடா வா...?" என்று கோபத்துடன் கேட்ட மஹத்..... கமழினியை எரிப்பதை போல முறைத்தவன்....
"யார பார்த்து டி வா டா போடான்னு சொல்லுற?" என்று பதிலுக்கு அவனும் எகுற...

"ஐயையோ... இங்க என்ன நடக்குது..... மஹத் சார் நீங்க எப்படி இங்க? ஏய் கமல் என்னடி என்னாச்சு... ஏன் மஹத் சார் கிட்ட சத்தமா பேசிகிட்டு இருக்க?" என்ற கேள்வியுடன் இவர்களை நோக்கி விரைந்து வந்தாள் மயிழினி....

"HEY ஹனி.... யார் இந்த வாயாடி.... எப்பா என்ன வாயு இவளளுக்கு?" என்று மஹத் கேட்டதும்...
"ம்... உன் பாட்டி வாயு எனக்கு.... என்னடா கிண்டலா.... என்னை பார்த்து வாயாடின்னு கூப்பிட்டது மட்டும் இல்லாம.. என் அக்காவை ஹனி கனின்னு கூப்பிடுற... என்ன உடம்பு எப்படி இருக்கு உனக்கு?" என்றவளை அடக்கும் விதமாக....

"கமல்.... என்ன நீ?... இவரு தான் மஹத் சார்... ஆரூரன்னோட தம்பி" என்று மயிழினி சொன்னதும்.....
"HEY... NO NO.... ஐயம் மஹத் தேவராஜ்... இது தான் என் அடையாளம்" என்று மஹத் சொல்ல...
"இப்போ என்ன இங்க ஆதார ஆட்டைக்கு போட்டோவா எடுக்குறாங்க.... உங்க IDENTITY பத்தி எல்லாம் இங்க பேசிகிட்டு இருக்கிங்க?" என்று கோவமாக கேட்டாள் கமழினி...

🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚Où les histoires vivent. Découvrez maintenant