இறகு 39

65 11 7
                                    

🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚

🄴🄿🄸..39

"Hey ஹனி.... நீ என்ன இந்த நேரத்துல தனியா நடுரோட்டுல நடந்து போய்ட்டு இருக்க.. ஆமா எங்க போற நீ" என்ற மஹத்தை பார்த்து மயிழினி என்ன சொல்வதென்று புரியாமல்  பேயை பார்த்தது போல விழித்தவள் முன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்டுடன் வந்து நின்றாள் கமழினி....அவளை பார்த்ததும் மஹத்தின் முகம் மாறிய நிலையில்....

"மஹத் சார் நான்... நான் வந்து" என்று மயிழினி உண்மையை சொல்லும் முன்பு....

"மஹத்.... யாரு இந்த பொண்ணு?" என்று கேட்டுக்கொண்டே மஹத் காரில் இருந்து அவனின் நண்பன் KV இறங்கியவன்...

"என்ன மஹத் யார்கிட்ட பேசிகிட்டு இருக்க" என்று மஹத்தின் நண்பன் KV கேக்க... மஹத்தோ மயிழினி அருகில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருக்கும் கமழினியை மட்டும் முறைந்தப்படி நின்று இருந்தவனின் தோளில் தட்டி... "டேய் என்னடா....
யாரு இவங்க "என்று மீண்டும் மஹத்தின் நண்பன் கேக்க...

"அக்கா போகலாமா" என்று கமழினி கேக்க....
"ம்.... போகலாம்" என்ற மயிழினியின் முகத்தையே காதலாக பார்த்துக்கொண்டு இருந்தான் மஹத்....

"ஹனி...." என்று மீண்டும் மஹத் அழைத்ததும்...

"பாஸ் ... Time ஆகுது... என் அக்கா நாளைக்கு உங்க கம்பெனிக்கு வந்த பின்னாடி ஹனிகிட்ட நீங்க பேசிக்கோங்க... இப்போ நாங்க கிளம்பனும் வழியே விடுங்க" என்ற கமழினியை ஏகத்துக்கும் முறைத்தான் மஹத்....

"ப்ச்... நான் உன்கிட்ட பேசல... ஹனி நீ என்ன? இந்த நேரத்துல எங்க போய்ட்டு வர?" என்று மீண்டும் மஹத் அதே கேள்வியை கேக்க...

"நான்.. நா வந்து மஹத் சார்" என்று மயிழினி உண்மையா கூறும் முன்னே..

"ஹலோ ஹலோ.... Mr. மஹத்... What is this?.... Mrng 9am. To 5pm வரை தான் என் அக்கா உங்களுக்கு PA... After that அவ எங்க வீட்டு பொண்ணு... நாங்க எங்க போறோம் எங்க இருந்து வரோம்ன்னு எல்லாம் நீங்க தெரிஞ்சிக்க ஆசைப்படாதிங்க... Its none of your பிஸ்னஸ்....அக்கா நீ முதல்ல வண்டியில ஏறு.... நீ என்ன நடு ரோட்டுல நின்னுகிட்டு யார் யாருக்கோ பதில் சொல்லிக்கிட்டு இருக்க" என்ற கமழினியின் பேச்சை கேட்டு மஹத்தின் நண்பனுக்கு கோவம் தலைக்கேறிய நிலையில்...

🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚Where stories live. Discover now