🦚 மனதை மயிலிடம் இழந்தேனே 🦚
🦚Epi 7
🅆🄴🄴🄺🄴🄽🄳✍🏼🅂🅃🄾🅁🅈
**********************************************
மயிழினியை பாத்ரூமில் வைத்து பூட்டிய எமிலி
மறுநாள் காலை சந்தோஷமாக 🄰🄳🄼கம்பெனிக்குள் நுழைந்தவள் கண் எதிரில் கூட்டம் அலைமோதியது...."ஓ.... அந்த மயிழினி நேத்து முழுக்க பாத்ரூம்ல இருந்து கத்தி கத்தி போய் சேர்ந்துட்டாளா..... சரி.... நம்மளும் போய் ஒன்னும் தெரியாத மாதிரி ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுடுவோம்" என எண்ணிக்கொண்டே எமிலி உள்ளே சென்றவள் கண்ட காட்சியில் அவளுக்கு தலையே சுற்றியது......
"இதோ எமிலியே வந்துட்டாளா.. வா வா.... இங்க பார்த்தியா எமிலி... நம்ம மயிழினி... இது நாள் வரை யாராலயும் தேடி எடுக்க முடியாத 2020accounts மொத்தத்தையும் தேடி எடுத்துட்டாள்....வா... நீயும் வந்து பாரு" என்ற வானதியின் வார்த்தையை கேட்டு எமிலி பயத்தில் முகம் சிவந்தவள்..
"ஏய்.... என் System ல உனக்கு என்ன வேலை.... முதல்ல அங்க இருந்து எழுந்துடு"..என மயிலை ...எமிலி கத்தியதும்.....
அவள் தோளை ஆறுதலாக தட்டி கொடுத்த மித்ரா....."Why tencsion எமிலி..... Year 2020accounts உன் system ல இருந்து டோட்டலா erase ஆகிடுதுன்னு நீ தானே மஹத்கிட்ட சொன்ன.... ஆனா இப்போ பாரு.... மயிழினி எல்லாத்தையும் recollect பண்ணிட்டாங்க..... சோ நீ அதுக்காக அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லலைனா கூட பரவாயில்லை... பட் ஏன் அவங்ககிட்ட நீ கத்துற"... என்று மித்ரா கேக்க.... இவர்களை இங்கே எதிர்பார்க்காத எமிலியின் முகத்தில் கலவரம் கூடி போனது....
தன்னை சுற்றி யார் என்ன பேசினாலும் அதை காதில் வாங்கிக்கொள்ளத மயிழினி... தன் பத்து விரல்களையும்... இரண்டு கண்களையும் கணினி மீது இருந்து அகற்ற மறுத்தவளின் மூளை மொத்தமும்..... வானதி தேவராஜ் அவளுக்கு கொடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மட்டும் தான் முழுகி இருந்தது...
"ஏன் மித்ரா....நம்ம எத்தனையோ பேர்கிட்ட இந்த சிஸ்டம்மை ரெடி பண்ண சொல்லி கேட்டுட்டோம்... ஆனா யாராலயும் முடியாத ஒரு விஷயத்தை எப்படி மயிழினி கொஞ்ச நேரத்துல பண்ணி முடித்துட்டாள் " என்று ஆச்சிரியமாக வானதி கேக்க....
ESTÁS LEYENDO
🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚
Fanfic😇😇யாருக்கு தெரியும்... தோன்றியதை எழுதுறேன்.....போற போக்குல நீங்க படியுங்கள் ...😇😇