🦚 மனதை மயிலிடம் இழந்தேன் 🦚
💞Epi - 12
w⃠e⃠e⃠k⃠e⃠n⃠d⃠ p⃠o⃠s⃠t⃠
**********************************************
"வேலு..... நான் சொல்லுறேன்.... நீ உன் சிஸ்டர் கூட போய் எமிலி பேர்ல கேஸ் கொடுத்து..எமிலியை உள்ள தூக்கி வைக்க ஏற்பாடு பண்ணு" என்ற ஆரூரனை கடந்து சென்ற மஹத்....
"மயிழினி... உங்கள இந்த வேலைக்கு சேர்த்த நான் சொல்லுறேன்...... எமிலி பண்ணது தப்பு தான்.... ஆனா அவ மேல போலீஸ் கேஸ் எல்லாம் தராதீங்க... Pls... எனக்காக நீங்க எமிலியை மன்னிச்சிடுங்க... நான் வேணும்னா அவளை இந்த நொடியே வேலையை விட்டு அனுப்பிடுறேன்... பட் pls... போலீஸ் கேஸ் எல்லாம் தராதீங்க "...என்ற மஹத்தை பாராமல் மயிழினியின் கண்கள் ஆரூரனை பார்க்க....
"முடியாதுன்னு சொல்லு Doll....முடியாதுன்னு சொல்லு.... அவ மேல கேஸ் கொடுப்பேன்னு சொல்லு Doll" என்று தன் வாய்க்குள் முணுமுணுத்தவனை பார்த்த மயிழினி...
"இந்த ஒரு முறை எமிலியை மன்னிச்சுடுவோம்..... அவங்க மேல நான் complaint கொ...கொடுக்கல" என்ற மயிழினியை எரிக்கும் விதமாக முறைத்தான் ஆரூரன்...
"Thanks..Thanku very much Honey ....I like you " என்ற மஹத்..... தன் அருகில் நின்று இருந்த ஆரூரனை கிண்டலாக பார்த்தவன்....
"இந்த கம்பெனி ல உங்களோட position இது தான்....................
இவ்வளவு தான்.................
இனியாவது உங்க லிமிட் எதுன்னு தெரிஞ்சு நடந்துக்கோங்க Mr. ஆரூரா............and எமிலி உயிரை குடிக்கிற சாத்தானா இருக்கலாம்.... ஆனா நீங்க........ ஹ்ம்... நீங்க பிறக்கும் போதே உங்க அம்மா உயிரை காவு வாங்கிட்டு தான் பிறந்து இருக்கீங்க... அதையும் நீங்க மறக்க கூடாது"... என்ற மஹத்தை......"மஹத்....... இப்போ நீ ஏன் தேவையில்லாத கதையெல்லாம் பேசுற" என்று வானதி கோவமாக கத்தியதும்.....
"ஹ்ம் 😏.....எமிலி.... நீ என்கூட வா..... மித்ரா... அதான் மயிழினி கம்பளைண்ட் தரலல்ல.....
நீ ஏன் மத்தவுங்க மாதிரி வேஸ்ட்டா இங்க நின்னுட்டு இருக்க........போ.... நீயாவது போய் உன் வேலை எதுவோ அத மட்டும் பாரு.....
Once again Thanks மயிழினி"..... என்று கண்கள் சிமிட்டி அவளை பார்வையால் உள்ளுக்குள் களவாடிய நிலையில் மஹத்.. எமிலியுடன் வெளியே சென்றவனின் பார்வை.... ஆரூரன் மீது கேவலமாக பதிந்து சென்றது....
CITEȘTI
🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚
Fanfiction😇😇யாருக்கு தெரியும்... தோன்றியதை எழுதுறேன்.....போற போக்குல நீங்க படியுங்கள் ...😇😇