செவிலி தாய்

12 2 2
                                    

தொலைவிலோ அருகிலோ
உன் முகம் கண்ட நொடி
வானில் மிதக்கிறேன் நான்

எனக்கு உரிமை இல்லாதவன்
என தெரிந்தும்
நேசிக்கிறேன் உன்னை

உன் மழலை மொழி கேட்க
தவம் செய்கின்றன
என் செவிகள்

இவ்வுலகம் என்னை மலடி
என ஏசும் பொழுது
அம்மா என அழைத்தாய்

என் கண்ணிர் வடிந்தன
உன்னை போல் பிள்ளைகளின்
செவிலி தாய் ஆனேன்.

(குழந்தை இல்லை என ஒருவரை காயப்படுத்தும் முன் நம் சந்ததியினரும் அந்த துன்பத்தை அனுபவிக்க கூடும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்...
குழந்தை உள்ளவர்களுக்கு தன் குழந்தை மட்டுமே குழந்தை.. மற்றவருக்கு எல்லா குழந்தைகளும் தன் குழந்தையே .... முடிந்தாவரை அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்)

பொக்கிஷம்Donde viven las historias. Descúbrelo ahora