ஏக்கம்

8 1 0
                                    

கலகல எனப் பேசி
சிரிக்க வைத்தாய் என்னை...

டமடம என கெட்டி மேளம் கொட்ட
திருமணம் செய்தாய் என்னை..

சின்ன சின்ன பார்வைகளால்
சீண்டி பார்ததாய் என்னை..

தக தக என மின்னும் தங்கத்தால்
   அலங்கரித்தாய் என்னை..

சில நாள் கழிந்தது

கொழுகொழு எனப் பெண்ணை
பெற்றேன் நான்

பட பட எனக் குறை கூறி
திட்டி தவிர்த்தாய் என்னை

சிடு சிடு எனக் கோபத்தால்
கலங்க வைத்தாய் என்னை

பக் பக் என எனது
இதயம் துடித்தது

தர தர என இழந்து
சென்றாய் என்னை

கடகடவென  நம் மகள் சிரிப்பதை
பார்க்க செய்தாய் என்னை

பொலபொல என
உன் கண்ணிர் சீந்தியது

சொரசொரப்பான உன் கைகளால்
என் முகத்தை ஏந்தினாய்

என்னை மன்னிப்பாயா
என் அருமை மனைவியே
என் தாயை எனக்காக பெற்று தந்த
முழுமதியே என்றாய்
என் ஏக்கம் தீர்ந்தது.

(பெண் பிள்ளை பெற்றது என் குற்றம் இல்லை....)
(கடவுள் நமக்கு அளிக்கும் வரமே நம் குழந்தைகள்..
அதில் ஆண் பெண் பேதம் ஏனோ?
பாலில் வேறுபாடுகள் உண்டு
பாசத்தில் உண்டோ?
சிந்திப்போம்)

Dostali jste se na konec publikovaných kapitol.

⏰ Poslední aktualizace: Apr 03, 2019 ⏰

Přidej si tento příběh do své knihovny, abys byl/a informován/a o nových kapitolách!

பொக்கிஷம்Kde žijí příběhy. Začni objevovat