நீயும் நானும்
Part - 6
முல்லையின் நினைவுகளோடு வெற்றியை பார்க்க சென்றான் கதிர்.
வெற்றியை பார்த்த உடன் தன்னையும் மீறி அடக்கி வைத்த அழுகை வெளி வந்தது.
வெற்றி:மச்சான்... ஏன்டா அழுகுற
கதிர்:முல்ல.....முல்ல.....
வெற்றி:முல்லையா..... அவளுக்கு என்னடா
கதிர்:நா பாத்தேன் டா அவள..
வெற்றி:எப்போ? எங்க?
கதிர்:நம்ம வீட்டுக்கு வந்தாடா
வெற்றி:வீட்டுக்கா
கதிர்:ஆமாடா
வெற்றி:வீட்டுக்கு எப்படி
கதிர்:ஆதவன் சொன்ன அம்மா... முல்ல தான்டா
வெற்றி:முல்லையா😲
கதிர்:திரும்ப வந்துடாடா என் தேவதை
வெற்றி:அவ உன்ன பாக்க வரல. உன் பையன பாக்க வந்து இருப்பா
கதிர்:யார பாக்கையோ... வந்தாலா இல்லையா... அது போதும்..
வெற்றி:கதிர் அவ உன் வாழ்க்கையில வேணுமா
கதிர்:அவ தானடா என் வாழ்க்கையே
வெற்றி:அவ தான் உன்ன வேணானு போய்டாலே டா
கதிர்:ஏதோ என் கெட்ட நேரம்டா அது
வெற்றி:இப்பவும் அவ உன்ன தேடி வரலடா
கதிர்:என் பக்க நியாயம் தெரிஞ்சா அவ என்ன ஏத்துபாடா.... ஆனா அது நடக்காது
வெற்றி:நா முல்லைட பேசவாடா
கதிர்:வேணாடா
வெற்றி:நா பேசுறேன்டா... உன் நிலமைக்கு என் குடும்பம் தான காரணம்
கதிர்:நீ சொன்னாலும் அவ நம்ப மாட்டாடா... நீ என் frd அதான் எனக்கு support பண்ணி பேசுறனு சொல்லுவா.
வெற்றி:அப்புறம் உன் விருப்பம் டா
கதிர்:சரி நா கிளம்புறேன் டா. Bye
வெற்றி:bye da. எதையும்நினைத்து மனச கஷ்டப்படுத்திகாத
நாட்கள் நகர....