நீயும் நானும் - 11
முருகன்: அப்பா உக்கும் வயசு ஆகுது. உடம்பும் முடியல. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கனும்னு ஆசைப்படுறேன்.
முல்லை: .....
முருகன்: அம்மா இல்லாம நீ எவ்வளவு கஷ்டப்பட்ட.... அந்த குழந்தையும் உன்ன போல தான் கஷ்டப்படுது. உனக்கு புடிச்சு குழந்தை தானம்மா அவன்.
முல்லை: ....
முருகன்: உன்ன கட்டாய படுத்துறேனு நினைக்காத... அந்த மாப்பிள்ளை நல்ல பையன். நா விசாரிச்சுட்டேன். இரண்டாவது கல்யாணம் வேணாம்னு இருந்தவரு. அவங்க வீட்டில உன்ன கட்டிக்க சொல்லி கேட்டப்ப... சரினு சொல்லிட்டாறாம்மா... நீ என்னம்மா சொல்ற
முல்லை: ...
முருகன்: உன் முடிவு என்னம்மா
முல்லை: ......
முருகன்: அம்மாடி....
முல்லை: சரி.... பா....
முருகன்: எனக்காக சொல்லாதம்மா... உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் சொல்லும்மா
முல்லை: எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் அப்பா.....
முருகன்: அம்மாடி..... முல்ல.... இது போதும்மா அப்பாவுக்கு
முருகன் கண்ணீர் சிந்த.... தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள் முல்லை.
முருகன் பாண்டியனுக்கு போன் செய்து முல்லை திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டதாகவும் நிச்சயத்திற்கு நாள் குறிக்கும் படியும் சொல்லிவிட்டார்.
கதிர் இல்லம்.....
இரவும் அனைவரும் உணவருந்த அமர்ந்திருந்தனர்.
பாண்டியன் முருகன் கூறியதை கூற அனைவருக்கும் மகிழ்ச்சி.
கதிருக்கோ முல்லை தன் தந்தைக்காக ஒத்துக்கொண்டாளா இல்லை தன் விரும்பி ஏற்று கொண்டாளா என்ற குழப்பத்தில் அமர்ந்து இருந்தான்.
பாண்டியன்: கதிரு... என்பா... ஒரு மாதிரி இருக்க
கதிர்: ஒன்னும் இல்லப்பா..