தவிப்பு

409 76 24
                                    

நீயும் நானும் - 19

கதிர் முல்லையின் திருமணம் நல்ல முறையில் நடந்தேறியது..

எல்லா சடங்குகளையும் முடித்துவிட்டு கதிரின் வீடு வந்து சேர்ந்தனர் அனைவரும்....

பல உறவினர்கள் வந்து போக அன்றைய மாலைப் பொழுதும் பரபரப்பாக இருந்தது....

முல்லை guest room ல் தங்க வைக்கப்பட்டிருந்தாள்...

தாலி கட்டிய அந்த ஒரு நொடி இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் உற்று நோக்கியது...

பிறகு இருந்த பரபரப்பில்....

இருவரும் பார்த்துக் கொள்ளவும் இல்லை எதைப் பற்றியும் பேசிக் கொள்ளவும் இல்லை...

விளக்கு ஏற்றுதல் பாலும் பழமும் என்று எல்லா சடங்குகளும் நல்ல முறையில் நிறைவேறியது..

வீடு திரும்பிய பின்பும் சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் இருவரும் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்....

இரவு ......

முல்லையை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் வெற்றியின் மனைவி மலர்...

மலர் : அண்ணி...

முல்லை : சொல்லு மலர்...

மலர் : ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு..

முல்லை : அதெல்லாம் ஒன்னும் இல்ல...

மலர் : பயமா இருக்கா

முல்லை :  குழப்பத்துடன் மலரை பார்க்க

மலர் : பயப்படாதீங்க...  கதிர் அண்ணா ரொம்ப... நல்லவரு உங்கள நல்லா பாத்து பாரு...

முல்லை MV : அவன் என் மேல செம கோவத்துல இருப்பான்... என்ன பிடிக்காமல் தான் அவன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா...

முல்லை : ம்ம்....

மலர் : நீங்க போய் சிரிச்சிங்கனாளே எங்க அண்ணன்... உங்கள பார்த்து அப்படியே மயங்கிடும்..

முல்லை mv : பல வருஷத்துக்கு முன்னாடி என்ன பார்த்து மயங்கினவன் தான்... இப்ப என்னவோ முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு ஒத்தக்கால்ல நிக்கிறான்..

நீயும் நானும்Where stories live. Discover now