உன் முடிவு

537 89 30
                                    

நீயும் நானும் - 10

School....

ஆதவன் முல்லை பார்க்க செல்கிறான்.

ஆதவன்: முல்லை அம்மா

முல்லை : பட்டு வாங்க. சாப்டிங்களா

ஆதவன்: சாப்டேன். நீங்க

முல்லை: சாப்டேன் டா பட்டு

ஆதவன்: அம்மா....

முல்லை: என்னடா பட்டு

ஆதவன்: அது...

முல்லை: சொல்லுடா... அம்மாட என்ன தயக்கம்

ஆதவன்: நீங்க எங்க வீட்டுக்கு வரீங்களா

முல்லை: அவ்வளவு தான வந்துட்டா போச்சு.. நாளைக்கு வரவா..

ஆதவன்: நீங்க வந்து என் கூடவே இருக்கனும்.....

முல்லை: உன் கூட மட்டும் தான் இருப்பேன் போதுமா

ஆதவன்: நீங்க உங்க வீட்டுக்கு போகக்கூடாது.. எங்க வீட்லயே இருக்கனும்

முல்லை: உங்க வீட்லயே என்னால இருக்க முடியாதுடா கண்ணா

ஆதவன்: ஏன்... ஏன் முடியாது

முல்லை: எங்க வீட்டுல எங்க அப்பா இருக்காங்கள.. நா வந்துட்டா அவங்க தனியா இருப்பாங்கள அதான்

ஆதவன்: அப்போ அவரையும் கூட்டிடு வாங்க

முல்லை: அவர் வர மாட்டாருடா

ஆதவன்: ஏன் வர மாட்டாங்க

முல்லை இவனுக்கு எப்படி புரிய வைக்குறது.

ஆதவன்: சொல்லுங்கம்மா

முல்லை: அங்க வந்தா எல்லாரும் எங்கள திட்டுவாங்க பட்டு

ஆதவன்: அதெல்லாம் திட்ட மாட்டாங்க. நா திட்ட கூடாதுனு சொல்றேன்.

முல்லை: நீ சின்ன பையன் நீ சொன்னா யாரு கேக்க மாட்டாங்கடா

ஆதவன்: அப்படியா... சரி... அப்போ அப்பாவ கேக்க சொல்லவா..

முல்லை:.....

ஆதவன்: சொல்லுங்கம்மா

முல்லை: அது சொன்னா உனக்கு புரியாது பட்டு

நீயும் நானும்Where stories live. Discover now