நீயும் நானும் - 10
School....
ஆதவன் முல்லை பார்க்க செல்கிறான்.
ஆதவன்: முல்லை அம்மா
முல்லை : பட்டு வாங்க. சாப்டிங்களா
ஆதவன்: சாப்டேன். நீங்க
முல்லை: சாப்டேன் டா பட்டு
ஆதவன்: அம்மா....
முல்லை: என்னடா பட்டு
ஆதவன்: அது...
முல்லை: சொல்லுடா... அம்மாட என்ன தயக்கம்
ஆதவன்: நீங்க எங்க வீட்டுக்கு வரீங்களா
முல்லை: அவ்வளவு தான வந்துட்டா போச்சு.. நாளைக்கு வரவா..
ஆதவன்: நீங்க வந்து என் கூடவே இருக்கனும்.....
முல்லை: உன் கூட மட்டும் தான் இருப்பேன் போதுமா
ஆதவன்: நீங்க உங்க வீட்டுக்கு போகக்கூடாது.. எங்க வீட்லயே இருக்கனும்
முல்லை: உங்க வீட்லயே என்னால இருக்க முடியாதுடா கண்ணா
ஆதவன்: ஏன்... ஏன் முடியாது
முல்லை: எங்க வீட்டுல எங்க அப்பா இருக்காங்கள.. நா வந்துட்டா அவங்க தனியா இருப்பாங்கள அதான்
ஆதவன்: அப்போ அவரையும் கூட்டிடு வாங்க
முல்லை: அவர் வர மாட்டாருடா
ஆதவன்: ஏன் வர மாட்டாங்க
முல்லை இவனுக்கு எப்படி புரிய வைக்குறது.
ஆதவன்: சொல்லுங்கம்மா
முல்லை: அங்க வந்தா எல்லாரும் எங்கள திட்டுவாங்க பட்டு
ஆதவன்: அதெல்லாம் திட்ட மாட்டாங்க. நா திட்ட கூடாதுனு சொல்றேன்.
முல்லை: நீ சின்ன பையன் நீ சொன்னா யாரு கேக்க மாட்டாங்கடா
ஆதவன்: அப்படியா... சரி... அப்போ அப்பாவ கேக்க சொல்லவா..
முல்லை:.....
ஆதவன்: சொல்லுங்கம்மா
முல்லை: அது சொன்னா உனக்கு புரியாது பட்டு