நீயும் நானும் - 13
முல்லை: அப்பா என்ன யாருக்கும் பிடிக்கல....
அப்பவும் ஏமாத்துனாங்க... இப்பவும் ஏமாத்துறாங்க...
முருகன்: என்னமா சொல்லற..
முல்லை: இந்த கல்யாணம் நடக்கனுமாப்பா...
முருகன்: ஏம்மா..... என்னாச்சு😲
முல்லை: எனக்கும் குழப்பமா இருக்குப்பா
முருகன்: அப்பா உன்கிட்ட ஒன்னு சொல்லவ
முல்லை: என்னப்பா நீங்க. Permission எல்லாம் கேக்குற சொல்லுப்பா...
முருகன்: உங்க அம்மா வயித்துல நீ இருந்தப்பா நாங்க எங்களுக்கு பெண் குழந்தை தான் வேணும்னு ஆசை பட்டோம்.
உன்ன வயித்துல வைச்சுக்கிட்டே உங்கம்மா வேலைக்கு போனா.
எனக்கு உதவியா இருந்தா.
அவ தைரியம் யாருக்கும் வராது.நீயும் உங்கள் அம்மா மாதிரி தைரியமா இருக்கனும்.
வாழ்க்கை சந்தோஷமா போய்கிட்டு இருந்தது.
8 மாதத்து குறை மாத குழந்தையா நீ பிறந்த.
உன்ன எங்க கையில கொடுக்கவே இல்ல.
மூச்சு திணறல்னு உன்ன ICU ல வச்சுட்டாங்க.
இரண்டு நாள் பிறகு தான் உங்க அம்மா உன்ன கையில வாங்குனா.
1 kg மட்டுமே எடை உள்ள குழந்தை நீ.
பார்க்க குட்டி பூனைகுட்டி மாதிரி அழகா இருந்த.
உன்ன எப்படி, எல்லாம் குழந்தை போல ஆக்க போறோம்னு நா வருத்தப்பட்டேன்.
உங்க அம்மா நம்பிக்கையா உன்ன அப்படி பாத்துக்கிட்டா.
நீயும் நல்லா வளர ஆரம்பிச்ச.
நடக்கறது பேசுறதுனு எல்லா வேலையும் சீக்கிரம் சீக்கிரமே செஞ்ச.
உன் பேச்சுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது.
ரோட்ல போரவங்கள கூப்பிட்டு வம்பு வழப்ப.
முருகன் பேசவே மாட்டான் அவன் பொண்ணு வாய மூட மாட்றானு சொல்லுவாங்க.
சில பேர் பார்வதி பொண்ணுக்கு பார்வதிய விட வாய் ஜாஸ்தினு சொல்லுவாங்க.
வாயாடி பொண்ணுமா நீ.
உன் படிப்பு நடத்தை குணம் திறமைனு எல்லாதுலயும் நீ நல்லபடியா வளந்து வந்த.
உங்க அம்மா இருக்குற வரை உன்னை நினைச்சு பெருமை பட்டுகிட்டு தான் இருந்தா.
இப்போ நீ இப்படி அழுது வருத்தப்பட்டா அவளால தாங்க முடியுமா.
நீ எப்பவும் தைரியமா இருக்கனும்.
எதையும் யோசிச்சு செய்யனும்.
யார் மனசையும் கஷ்டப்படுத்த கூடாது.
எதுக்காகவும் உடைஞ்சு போக கூடாது.
எதையும் நேருக்கு நேர் சந்திக்கனும்.
எதிரியா இருந்தாலும் வெளிப்படையாக பேசனும்.
உனக்கு நல்ல வாழ்க்கை அமையும்.
உன்னையே நீ கஷ்டப்படுத்திகாத.
உன்ன பிடிக்காதவங்க யாரும் இருக்க மாட்டாங்க.
உன்னை யாராலும் ஏமாத்த முடியாது.
ஏமாந்து போற ஆளும் நீ கிடையாது.
பிறக்கும் போதே பிரச்சினைகளை சமாளித்து பூமியில் பிறந்த நீ எதையும் எதிர் கொள்ளும் திறமை கொண்டவள்.
உனக்கு வெற்றியும் பெருமையும் சந்தோஷமும் எப்பவும் கிடைக்கும்.
இது உன் அப்பாவின் ஆசை.
அம்மாவோட ஆசீர்வாதம்.
முல்லை: அப்பா உங்க நம்பிக்கைக்கு நா தகுதியானவளா இருப்பேன்.
முருகன்: எதையும் தைரியமா சந்திக்கனும் சரியா.
முல்லை: சரிப்பா
முல்லை mv : கதிர் கிட்ட நேருக்கு நேர் பேசிட வேண்டியது தான்
எது நடந்தாலும் தைரியமா சந்திக்கனும்.
என்ன யாராலும் ஏமாத்த முடியாது.
இணைவோம்...🙏
இன்று என் மகளின் ஐந்தாவது பிறந்த நாள்...
அவளுக்கா இந்த சிறு பதிவு...
அவள் பிறக்கும் போது இருந்த சில கஷ்டங்களையும் அவள் எப்படி வளர வேண்டும் என்று ஆசை படுகிறேனோ அதையும் இதில் பதிவிட்டுள்ளேன்.
அன்பு மகளே...
நீ எண்ணும் உயரத்தை அடையவும் எல்லா வளமும் அருளும் உனக்கு கிடைக்கவும் ஆரோக்கியமாக வாழவும்.....
உன் தாய் தந்தையின் அன்பும் ஆசீர்வாதமும்....😘😘