மாயம் - அத்தியாயம் 23

53 2 0
                                    

ராஜதுரையும் மாரியும் மட்டும் வந்திருந்தால் கூட துருவ் அவர்களைத் தனியே சமாளித்து இருப்பான்.

ஆனால் அவர்கள் தம் அடியாட்களுடன் வரவும் வேறு வழியின்றி ஜெய் கூறியது போல் அவன் அங்கிருந்து ஓட,

"அவன் ஓடுறான்லே... பிடிங்கடா அவன...." எனக் கத்திய ராஜதுரை துருவ்வைத் துரத்த,

ஒரு மலை உச்சியில் வந்து மாட்டிக் கொண்டான் துருவ்.

துருவ்வை நெருங்கிய ராஜதுரையின் ஆட்கள் அவனை சுற்றி வளைக்க, துருவ்வைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்த ராஜதுரை, "என்னலே ***** சாதிக்கார நாயே... உன் கூடப் பொறந்தவன் போல சுத்திக்கிட்டு இருந்தவனையே போட்டுத் தள்ளிட்டோம்... எங்க கஜா இம்புட்டு நேரத்துக்கும் உன் அண்ணன போட்டுத் தள்ளி இருப்பான்... நீயி மட்டும் எதுக்குலே உசுரோட இருக்க?" எனக் கேட்கவும் மாரி உட்பட அவரின் அடியாட்கள் அனைவரும் ஏளனமாக சிரித்தனர்.

மாரி, "ஐயா... இன்னும் எதுக்குலே பார்த்துட்டு நிக்கிறீய... இவன கொன்னுருங்க..." என்கவும், "செத்த பொறுமையா இருலே... எப்படியும் பயலு போய் சேர தான் போறான்... செத்த நேரம் இருந்துட்டு போகட்டும்... எலேய் மாரி... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் பெத்த ஒரு சனியன் இருக்காளே... அதுக்கு இந்த கீழ் சாதிக்காரன் மேல அம்புட்டு காதலாம்லே..." என ராஜதுரை கூறவும் அதிர்ந்தான் துருவ்.

இவ்வளவு நாளும் அருணிமாவின் காதல் பற்றி ராஜதுரைக்கு தெரியாது என துருவ் நினைத்திருக்க, அவரோ அனைத்தும் தெரிந்தும் அமைதியாக இருந்துள்ளார்.

ராஜதுரை, "எங்க சாதில எந்தப் பயலாவது இந்தக் காரியத்த பண்ணி இருந்தாலே சும்மா விட்டுருக்க மாட்டேன்லே... இது நான் பெத்த சனியனே இதைப் பண்ணா பார்த்துட்டு சும்மா இருப்பேனா? உன்னைக் கொன்னுட்டு உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு அவளையும் உன் கூடவே அனுப்பி வைக்கிறேன்லே..." என்றவர், "எலேய் குடுலே அந்தக் கட்டைய... இவனும் ரொம்ப தான் என் கிட்ட வம்பு வெச்சிக்கிட்டான்... இவனை ஒரேயடியா கொல்லக் கூடாதுலே... என் கையால அடிச்சி கொல்லணும்..." என்றதும் மாரி ராஜதுரையின் கையில் ஒரு கட்டையை வழங்கியதும் அதனை எடுத்துக் கொண்டு துருவ்வை நோக்கிச் சென்றார் ராஜதுரை.

மாயம் செய்வாயோ!!! (முடிவுற்றது)Where stories live. Discover now