உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 14

1K 32 0
                                    

14

வீட்டின் முன்னே கார் வந்து நின்றது.

'என்னப்பா நீயா கார் ஓட்டிவந்தே...? ரகுராமன் பதட்டமாக கேட்டபடி வந்தார்.

'ஆமாம்பா...ஏன் கேடகுறீங்க...?'டையை லூசாக்கியபடி தந்தையை ஏறிட்டான்.

'உன்கிட்டே லைசன்சு இருக்கா..? அதைவிட இது அமெரிக்கா இல்லே கண்மூடிக்கொண்டு ஓட்ட சென்னைப்பா எப்ப என்ன நடக்கும் என்று தெரியாது...' லக்ஷ்மி கவலையாக சொன்னாள்.

'அம்மா இது என்னோட லைசன்சு..இண்டர்நேசனல் லைசன்சு...இங்கு வரமுதலே சென்னை ஹைவேயையும் சந்துகளையும் கரைச்சு குடிச்சுட்டுத்தான் வந்தேன். கவலைப் படாதீங்க....'

'எதுக்கும் ஒரு டிரைவரை வச்சுக்கோப்பா.' தந்தையும் கவலையுடன் சொல்ல

'எதுக்குப்பா? நான் கண்ட்ரோல் பண்ணி ஓட்டுறேன் நீங்க என்கூட வந்து பாருங்க புரியும்...' மகன் சொல்லிவிட்டு உடைமாற்ற மாடிக்கு போனான். மாதங்கி ஃபைல்களை ரகுராமனிடம் கொடுத்துவிட்டு தன்னறைக்குள்ளே நுழைந்துகொண்டாள். மனம் கொதித்தது.

'எங்கே? எதுக்குன்னு சொல்லாமல் பீச்சுக்கு கூட்டிட்டுப்போனதுமில்லாமல் உளறுகிறான் பொறுக்கி...! என்னைக்கல்யாணம் பண்ணணுமாமே....? அதுக்குத்தான் இந்த நல்லவன் வேஷமா? புலி பதுங்கியது இதுக்குத்தானா? என்னமாய் உருகுகிறான்? துரைக்கு அமெரிக்காவில் எவளும் மாட்டலையாக்கும்..? அதான் இங்கே ஓடிவந்துட்டாரு போல இந்த மாதங்கி மாட்டுவாள் என்று....அனாதை தானே ஏழைதானே எதுக்கும் மசிவாள் என்று கனவு கண்டுவிட்டாரு போல...இவனையா நான் கல்யாணம் செய்து கொள்வேன்? அப்படி செய்தால் நான் மாதங்கி இல்லையே....' துப்பாட்டாவை உருவி விட்டெறிந்தாள்.

'என்ன நினைச்சுட்டிருக்கான்...தன்னோட பணத்தையும் அழகையும் பார்த்துட்டு பொண்ணுங்க வருவாங்கன்னு நினைச்சுட்டிருக்கான்.. மன்மதக் குரங்கு...! தன்னோட அதிகாரத்தால் அடிபணிய வைக்க முடியும்னு கிளம்பி வந்துட்டானாக்கும்.... அத்தை மாமாவுக்காக பொறுத்துகிட்டு இந்த வீட்லே இருக்கணும்....கடவுளே இனிதான் அதிகமா பயப்படவேணுமோ..? பின்னே அடிபட்ட புலியாச்சே..? எப்ப என்ன செய்யுமோ..? நான் பேசிய பேச்சுக்கு.. நானா அப்படி பேசினேன்? எங்கேருந்து அந்த தைரியம் வந்தது..?' கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து கேட்டாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now