உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 16

1K 32 0
                                    


16

லஞ்ச் டைமுக்கு நேரம் வர மாதங்கியை ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட அழைக்கலாம் என்று அழைக்க சென்றான். 'மாதங்கி வேலை முடிஞ்சுடுத்தா ?' என கேட்க வாயெடுத்தான். அவள் யாருடனோ டெலிபோனில் சிரித்து பேசியபடி இருந்தாள். அவன் வந்து நின்றதையும் பொருட்படுத்தாதவள் போல பேச்சை தொடர்ந்தாள்.

'வர்றதா? இப்பவேவா ? ம்... ஓ.கே..வாங்க வெயிட் பண்ணிகிட்டிருக்கேன்' என்றபடி வைத்தாள். ரோஹித் பொறுமையாக காத்திருந்து,

'வாங்க மாதங்கி லஞ்ச் டைம் ஆயிடுத்து ரெஸ்டாரண்டுல சாப்பிடலாம்..' மெல்லிய முன்முறுவலுடன் அழைத்தான்.

'சாரி சார்..நீங்க போய் சாப்பிடுங்க...'

'ஏன் லஞ்ச் டைம் தானே எப்படியும் சாப்பிடப்போறீங்க...என் கூடவந்து சாப்பிடலாமே...'

'சாரி..நீங்க போய் சாப்பிடுங்க' என்றுவிட்டு அவனது பதிலுக்கு காத்திராமல் வெளியேறிப்போனாள். ரோஹித் தோள்களை குலுக்கி விட்டுக் கொண்டவனாக தனது கேபினை பூட்டிவிட்டு கிழே இருக்கும் ரெஸ்டாரண்டுக்கு போய் ஆர்டர் கொடுக்க மெனு கார்டை கையில் எடுத்தவன் பார்வை எதிரே இருந்த ஜோடி மீது விழ முகம் இருண்டது. மாதங்கி ஒருத்தன் கூட சிரித்து பேசியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் இவனை கவனிக்கவில்லை.

'இவன் நம்ம புரொடெக்ஷன் டிபார்டமெண்டுல வேலை செய்யும் மெக்கானிக் வசந்த் ஆயிற்றே..இவனுக்கு இங்கே என்ன வேலை? ஒவ்வொரு இடத்திலும் ஒன்றுக்கு மூன்று ரெஸ்டாரண்டு இருக்கு...' குழம்பியவனாக அவர்களை பார்த்தான்.

அவளது தட்டில் அவன் சாம்பாரு ஊற்றுவதும் அவள் போதும் போதும் என்று அவனது கையை பிடித்து தடுப்பதும் பார்த்தவனுக்கு தாடை இறுகியது. சாப்பிடப்பிடிக்காமல் தனது கேபினுக்குள் நுழைந்தவன் ஃபேனை போட்டான்.

'நான் கேட்டதுக்கு மறுத்தது இதுக்குத்தானா? அவனோட கொஞ்சுறதுக்குத்தானா? இவனுடனா டெலிஃபோனில் அந்தக் குழை குழைந்தாள்.? நான் கேட்டபோது காரணம் சொல்லிவிட்டு சென்று இருக்கலாம்...அதுவும் இல்லாமல் நான் ஒருத்தன் கேட்டுக்கொண்டு நிற்கிறேன் என்ற நினைப்பே இல்லாமல் எவ்வளவு அலட்சியமாக போனாள்...' ஆத்திரமாக வந்தது அவனுக்கு.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now