உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா -40

990 30 0
                                    

40
ரோஹித்தின் ரூமிலிருந்தபடி வர்ஷாவும் ரோஹித்தும் கோபிநாத்துடன் சர்ட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

'ஏய்...எங்கே வினய்யை காணலை..தூங்கிட்டானா?' ரோஹித் நெட்டி முறித்தபடி கேட்டான்.

'அவனா? இங்கு இருக்குற ஏதாவது கிளப்பில இருப்பான்..'

'என்ன கொஞ்ச கூட அக்கறை இல்லாமல் சொல்றே...'

'பின்னே என்னை என்ன பண்ண சொல்றே? பாட்டியோட குணத்துக்கும் அம்மாவோட பகட்டுக்கும்..அவங்களுக்கு ஏத்த மாதிரித்தானே பிள்ளை இருக்கும்.. அவனுக்கு பரிந்து பேசச்சொல்றியா? அண்ணனா அவன்? ஒரு பொம்பளையை கூட விட்டு..ச்சீ..அமெரிக்காவில் ஆட்டம் போட்டது போதாதுன்னு...டிராக்ஸ்சும், மதுவும் பொண்ணுங்களும் எப்பவும் போதையிலேயே வாழ்ந்துகிட்டிருக்கான்..'

'அவனை அப்படி விடக்கூடாது என்றுதானே டாக்டர்கிட்டே ட்ரீட்மெண்ட் எடுத்து மாத்திரை தவறமாக போட்டுக்க சொல்லிக் கொடுத்தேன்.... அது ஒழுங்கா போட்டிருந்தால் இப்படி மறுபடியும் தொடர்வானா?..'

'ஆமா...நீ இங்கே வந்துட்டே...நீ இருக்கும் வரை ஒழுங்கா இருந்தானா...அப்புறம் அம்மா இருக்கும் ஃபாஷன் ஷோவிற்கு போயிடுவா..பாட்டி சொல்லுதான் அவன்கிட்டே எடுபடாது உனக்குத்தான் தெரியுமே...நீ இல்லைன்னதும் வீட்டிலேயே கூத்தடிக்க ஆரம்பிசசுட்டான். அவனோட அட்டகாசம் தாங்கமுடியாமல் தான் நான் இங்கு ஓடி வந்தேன்...'

'ம்..அவனை கெடுத்ததே உன் அம்மாவும் பாட்டியும் தான்...உன் அப்பாவுக்கு வாயே இல்லை....எல்லாம்..அவ..' மேலே பேசாது நிறுத்தினான்.

'என்ன?'

'இரு.. பக்கத்து ரூமிலேருந்து சத்தம் வருது...அது வினய்யோட குரல் தானே..?'

'ஆமாடா..கூடவே மாதங்கியோடதும்..அவ ரூமிலே இவனுக்கு என்ன வேலை?...'

'என்னவோ..? இருக்கட்டும..கோபி சாப்பிட்டியான்னு கேட்குறான் அதுக்கு பதில் சொல்லு' என சர்ட்டில் கண் பதித்தபடி சொன்னான்.

'இல்லைடா..வினய் மாதங்கிகிட்டே கலாட்டா பண்றான் போலிருக்கு..' அவள் பதட்டமாக சொல்ல,

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now