15ரோஹித் புரொடெக்ஷன் பகுதியை பார்வையிட்டுக்கொண்டு வந்தான். விழிகள் பார்த்துக்கொண்டிருக்க, உதடுகள் கேள்விகள் கேட்க, மனதில் ஒருபக்கம் பதிவாகிக்கொண்டிருக்க, மறுபகுதி புது புராடெக்ட் எப்படி இருக்கவேண்டும் என்று அதற்கான திட்டங்களை வகுக்க தொடங்கியது. மாதங்கி அவனை பார்த்து விளக்கம் கொடுத்துக்கொண்டு வந்தாள். சிலநேரம் சந்தேகம் எட்டிப்பார்த்தது தான் சொல்வதை காது கொடுத்து கேட்கிறானா? ஒரு தடவை வாய்விட்டு கேட்டேவிட்டாள்.
'சார் உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னா சொல்லுங்க நான் எக்ஸ்பிளெய்ன் பண்ணலை...' என்றாள் எரிச்சல் இழையோட 'இவன் வரலை என்று யார் அழுதா...? முணுமுணுத்தாள்.
'எனக்கு வேறு ஒன்று மேலே இன்ட்ரஸ்ட்டாக இருக்கு' என்றான் அவன் தனது புதுதிட்டத்தை நினைத்துக்கொண்டு கைகளில் மெட்டிரீயலை திருப்பி திருப்பி பார்த்தபடி. அது தெரியாமல் மாதங்கி அவனது பேச்சால் சினம் அடைந்தாள்.
'பக்கத்திலிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? என்ற ஒரு எண்ணம் இல்லை...என்ன பேச்சு பேசுறது என்று யோசித்து பேசுவது இல்லை...எனக்கு வேறு ஒன்று மேலே ஆர்வம் இருக்கு என்றால் அதுக்கு என்ன அர்த்தம் என்று கண்டுபிடித்து தலை கால் வரைந்து இன்றைய மதியச்செய்தியாக்கி விடுவார்களே...?' மனது நினைக்க நினைக்க எரிச்சல் வந்து மண்டியிட்டது அவளது முகத்தில். ரோஹித் ஒவ்வொரு உதிரிபாகத்தையும் பார்த்தபடி வந்தவன் ஏதோ கேட்க மாதங்கி பக்கம் திரும்பினான். அவளை உற்று பார்த்து,
'எதுக்கு இந்த எள்ளும் கொள்ளும்?' அவன் கேட்டதும் அவள் சட்டென்று முகபாவத்தை மாற்றி அவனுக்கு பதில் சொல்லிய சமார்த்தியத்தை கண்டு அவன் வியந்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவள் பேச்சுக்கு செவி சாய்த்தான்.
ரோஹித் தனது கேபினிலிருந்தபடி அமெரிக்காவுக்கு லைன் கொடுத்தான்.
'ஹலோ...' மறுமுனை எடுப்பது தெரிந்தது.'ஹலோ..கோபி நான் ரோஹித் பேசுறேன்டா...'
'ஹாய்டா....எப்படி இருக்கே...இந்தியா எப்படி இருக்கு உன் அம்மா அப்பா..உன்..' அவனை இடைமறித்தான்.
YOU ARE READING
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா
Romanceகாதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r