உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 27

959 32 0
                                    


27

'ஏம்மா இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னே?' ரகுராமன்

'அவ ஒவையார் ஆகுற ஐடியாவில் இருக்காளோ என்னமோ?' ரோஹித் தனது வேலையை பார்த்தபடி சொல்ல மாதங்கி திரும்பி அவனை சுட்டெரித்துவிடுவது போல பார்த்தாள். அவன் பக்கத்தில் இருந்த கோட்டை எடுத்து பயந்தது போல பாவ்லா காட்டியபடி எடுத்து போட்டான்.

'அ...அத்தே எனக்கு நரேந்திரன் வெறும் பிரண்டு தான். அவரை கல்யாணம் செய்து கொள்ற ஐடியாவே இல்லை..'

'அப்ப வேற யாரையாவது?' அவர் இழுக்க,

'நீங்க வேறப்பா அவ தானே மாப்பிளை பார்த்துட்டா. அதை எப்படி உங்கிட்டே சொல்வது என்று கூச்சப்படுறா. இது புரியாமல்..' ரோஹித் சொல்ல பெரியவர்கள் அவளை பார்த்தனர். அவள் முறைத்தபடி அவனை பார்க்க மெல்லச் சிரித்தபடி கண்ணடித்தான். மாதங்கி கோபம் போய் திகைப்பு வர பார்த்தாள்.

'என்னம்மா ரோஹித் சொல்றது உண்மையா?' லக்ஷ்மி ஆவலுடன் அவள் கையைப் பிடித்தபடி அவள் முகத்தையே பார்த்தாள் .

'அம்மா மாதங்கி நம்ம கம்பனி சீஃவ் மெக்கானிக் வசந்தை லவ் பண்றாள்..இரண்டு பேரும் தான்...இதை எப்படி உங்ககிட்டே சொல்ல முடியும்? அவ பயந்துகிட்டு இருந்தா....' என்றபடி மாதங்கியை ஒரு மாதிரி பார்த்தான்.

'ஏம்மா நாங்க உன் ஆசைக்கு சந்தோஷத்துக்கு தடையா சொல்லப்போறோம்..? எங்கிட்டே என்ன பயம்?' ரகுராமன் கேட்க மாதங்கி எச்சிலை ஒன்று கூட்டி,

'மா....மா...அ..து.' அவள் வார்த்தைய தேட,

'என்ன மாதங்கி? இனி என்ன பயம்? அதுதான் உன் விஷயத்தை போட்டு உடைச்சாச்சே..பெரியவங்க ரெண்டு பேரும் பச்சை கொடி காட்டியாச்சு..அப்புறம் என்ன? கெட்டி மேளம்தான்...' சொல்லிவிட்டு மறுபடியும் கண்ணடித்தான்.

திகைத்தபடி சொல்வதறியாது நின்றிருந்தாள் மாதங்கி.


'அம்மா, நீங்க அப்பாகூட வசந்த் வீட்டுக்கு ஃபோன் போட்டு நல்ல நாளா பார்த்து வரச்சொல்லுங்க..நிச்சயம் பண்ண கையோடு கல்யாணத்தையும் நடத்தி வைச்சுடலாம்...'
உற்சாகத்துடன் ரோஹித் சொல்ல, அவன் உற்சாகம் ரகுராமனையும் தொற்றிக்கொண்டது.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now