மதியம் ஒன்றரையில்,
தனித்திருந்தேன் என் அறையில்;
மஞ்சத்தில் வீழ்ந்திருந்தேன்,
நெஞ்சத்தில் ஆழ்ந்திருந்தேன்;
மெதுவாக உள்ளே நுழைந்தான்,
சாதுவாக மெல்ல அணைத்தான்;
கண் இரண்டில் முத்தமிட்டான்,
ஐயமின்றி கட்டவிழ்த்தான்;
போராட நேரமில்லை,
வாயாட நா எழவில்லை;
களைப்பில் கண் அயர்ந்தேன்,
வந்தது யாருமில்லை ........
:
:
:
:
:
:
:
:
:
:
:
என் நித்திரைத்தேவன்!!
YOU ARE READING
My Tamil Poems #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள்
PoetryTamil poems # 46 in poetry on Oct 22nd
