தமிழன்னையே,
மூழ்கி முத்தெடுப்போர்க்கு நீ முத்தமிழ்,
ஆழ்ந்து தேன் சுவைப்போர்க்கு நீ பைந்தமிழ்;
இன்றலர்ந்த கவிஞர்க்கு நீ கன்னித்தமிழ்,
பார்போற்றும் புலவர்க்கு நீ அன்னைத்தமிழ்;
வள்ளுவனுக்கும் பாரதிக்கும் மட்டுமா நீ அன்னை?
தாலாட்டி, சீராட்டி பேணுகிறாய் என்னை;
எனவே,
சொல் மலர் கொண்டு வணங்கினேன் அம்மா உன்னை!
உயிர் மூச்சு உள்ள வரை மறவேன் அம்மா தமிழ் கண்ணை!
KAMU SEDANG MEMBACA
My Tamil Poems #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள்
PuisiTamil poems # 46 in poetry on Oct 22nd
