அணுவிற்குள் ஆற்றல்தனைக் கண்டறிந்த,
அறிவியலின் ஆற்றலைத்தான் என்ன சொல்ல! என்ன சொல்ல!தவழ்ந்து வரும் தென்றல்தனை காற்றாலை கொண்டு,
தடுத்தங்கே மின்சாரமாய் மாற்றும் ஆலையும் உண்டு;தாயின் கருப்பையில் இருக்கும் "ஸ்டெம் செல்" கொண்டு,
சேயின் நலத்தினையே காக்கும் மார்க்கங்கள் உண்டு;செவ்வாய்க்கு சென்று வரும் தூரம் என்ன தூரம்,
இனி சூரிய குடும்பத்தினையே தாண்ட வந்தது நல்ல நேரம்;எனினும்,
மானுடத்தின் ஆற்றலாம் அன்புதனை மறப்பதாயின்,
அறிவியலின் ஆற்றல்கொண்டு மானிடர்தாம் சிறப்பதெங்கன்?!!
![](https://img.wattpad.com/cover/81737543-288-k326201.jpg)
YOU ARE READING
My Tamil Poems #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள்
PoetryTamil poems # 46 in poetry on Oct 22nd