மகளாய் வளர்ந்தாய்,
புகழை பெற்றோர்க்கு அளித்து மகிழ்தாய்;மனைவியாய் அமைந்தாய்,
துணைவனின் சுமைகளை அணியென புனைந்தாய்;அன்னையாய் மலர்ந்தாய்,
தன்னையே கொடுத்து ஆனந்தம் கண்டாய்;குடும்பத் தலைவியாய் திகழ்ந்தாய்,
உடும்பென பந்தங்களை பற்றி இணைத்தாய்;அலுவலில் சிறந்தாய்,
பலுவென்றாலும் போராடி வென்றாய்;இத்தனையும் செய்தாய் சரி தான் பெண்ணே,
உன் ஆசைகளை குழிதோண்டி புதைத்தாய் சரியா கண்ணே!மனம் தளர்ந்து உடல் நலிந்து வாடிய பின்னர்,
மனம் அழுந்தி தனிமையில் வாடுகிறாய் பெண்ணே;நீ நேசித்த சொந்தங்கள் உன்னோடு தானிருக்க,
அவர் மீது ஆவேசம், உன் மீதும் துவேசம் ஏனடி கண்ணே;பிறர்க்கென வாழ்தல் நல்லதடி பெண்ணே;
ஆனால்,
உனக்கென ஒரு நொடியேனும் செலவிடடி கண்ணே...
![](https://img.wattpad.com/cover/81737543-288-k326201.jpg)
VOUS LISEZ
My Tamil Poems #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள்
PoésieTamil poems # 46 in poetry on Oct 22nd