எனக்கொரு நண்பன் வேண்டுமடா!

52 5 2
                                        


எனக்கொரு நண்பன் வேண்டும்,
ஏங்குகிறேன் மீண்டும் மீண்டும்;

என் பாரங்களைச் சுமக்க அல்ல,
என் தூரங்களை வழி நடத்திச் செல்ல;

என் சோகங்களை பகிர அல்ல,
என் ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ள;

எனக்காகத் தன்னை லேசில் மாற்றாதவன்,
ஒருபோதும் என்னை தராசில் ஏற்றாதவன்;

என் மனதோடு ஒத்துச் செல்பவன்,
தன் அறிவால் என்னை வெல்பவன்;

அகமொன்று, புறமொன்றாய் நடிக்காதவன்,
என் அகத்தின் ஆழத்தை படிக்கத் தெரிந்தவன்;

எங்கே ஒளிந்தாய் எனதுயிர் நண்பா,
இங்கே அழைத்தேன் சீக்கிரம் ஓடிவா!

My Tamil Poems               #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள் Dove le storie prendono vita. Scoprilo ora