என்னைக் கவர்ந்த கள்வன்!

54 4 3
                                        

பணியிலிருந்து திரும்புகையில்,
பேருந்தில் அமர்ந்திருந்தேன்;
பணிக்கும் இரு விழிகளுடன், குறுகுறு வென்றெனை நோக்கினான்;

என் உள்ளமெல்லாம் நெகிழ்ந்திடவே,
கள்ளச் சிரிப்பொன்றை மெல்ல உமிழ்ந்தான்;

ஒரு நொடியில் எனை மறந்தேன்,
இளம் நங்கையின் தாய் என்பதனையும் நான் மறந்தேன்;

என் உள்ளச் சுமை தாளாமல்,
பொதுவென்றும் பாராமல்,
கட்டித் தழுவினேன் அவனை,
ஆர்வமுடன் எனை அணைத்து முத்தமிட்டான் அவனும்;

அம்மம்மா என்ன சுகம்,
அன்று தான் விளங்கியது,

அம்மம்மா என்றெனை அழைக்க,
பாட்டியாக நான் உருவெடுக்க,
ஆசை வந்தது என் உள் என்று,
அப்பிஞ்சுக் கள்வனைக் கண்டதுமே!

Вы достигли последней опубликованной части.

⏰ Последнее обновление: Nov 08, 2016 ⏰

Добавьте историю в свою библиотеку, чтобы получать уведомления о новых частях!

My Tamil Poems               #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள் Место, где живут истории. Откройте их для себя