கண்ணீர் அது ஆனந்தத்தின் உச்சம்,
கண்ணீர் அது ஆவேசத்தின் ஆழம்,
கண்ணீர் அது கவலைகளின் காலடி,
கண்ணீர் அது காதலின் சொச்சம்,
கண்ணீர் அது காசுள்ளவனுக்கு கசப்பு,
ஆனால்,
கண்ணீர் காசற்றவனுக்கு காலி யாகாத கற்பகத்தருவான அட்சயப் பாத்திரம் ,,,,,,
எத்தருணத்திலும் ஏழையின் ஆற்றாமையை எடுத்து சொல்லும் என்பதனாலோ என்னவோ
கடவுளும் கரைகின்றான்
கவலைகளிலிருந்து கரையேற்றுவதற்காக,,,,,,
YOU ARE READING
பனிதுளி
Poetryஉணர்வுகள் 💗💗💗 வார்த்தைகளாய் Pdicha Like panunga mistakes irundha comment panunga mistake ah avoid panikara frds.