ஆழ்கடல் ஆழத்தை விட ஆழம் தான்
அன்னையின் அமுதன்பு .....
ஆகாயத்தின் நீளத்தை விட நீளும் தான்
அப்பாவின் அறிவன்பு .....
ஆதவனின் ஒளியைப் போல
பிரகாசிப்பது உடன் பிறப்பின்
உற்ற அன்பு.....
சுவாசக் காற்றாய் தோல்வியிலும்
துவள விடாமல் துணை நிற்கும்
நிதர்சன அன்பு.....
மரணம் தாண்டியும் சுமக்கும்
மண்ணை போல மறையாது காக்கும்
இறையன்பு .....
அன்பின் பரிமாணங்கள் வேறு தான்
ஆனால்,
அளவு ஒன்று தான்
அளவுகோல் தேவையா? அளந்து
பார்க்க
YOU ARE READING
பனிதுளி
Poetryஉணர்வுகள் 💗💗💗 வார்த்தைகளாய் Pdicha Like panunga mistakes irundha comment panunga mistake ah avoid panikara frds.