அழகான நாட்கள்

907 92 165
                                    

நெடுஞ்சாலையில் வேகமாய் சென்றது, அவனின் வாகனம்.......

அவன் உள்ளம் ஊமையாய் அழுக..... கண்கள் அதிகாலை செஞ்சூரியனை போல் சிவந்திருந்தன......

உடலில் உள்ள வலியை விட உள்ளத்து வலியே அவன் உயிரை வதைப்பதாய் உணர்ந்தான்....

உணர்வுகள் புதைக்கப்பட்டு பழகிய அவன் மனது, எந்நேரமும் வெடித்துவிடும் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது.......

இவ்வாறு தான் நடக்கும் தான் என ஏற்கனவே தெரிந்தும், இப்போது நடந்த ஏமாற்றத்தை தாங்க, அவன் மனதில் தெம்பில்லாமல் போனது....

தன் நம்பிக்கையின் சிகரமாய் விளங்கும், தனக்குரியவளே அவன் நெஞ்சத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் கோடாரி கொண்டு தகர்ப்பாள்....என அவன் ஒருகாலமும் எண்ணியதில்லை....

தன்னுயிரே இனி தனதில்லை, என தன்னவளின் வாய்மொழியாய் கேட்டதிலிருந்து, உயிரானது உடலை விட்டு பிரிந்தது போல் உணர்ந்தான்......

கோபத்தை யாரிடம் வெளிப்படுத்துவது என புரியாமல், ஒன்றுமறியா காரின் கியரில் தன் கோபத்தை வெளிப்படுத்தி, வேகமாக செல்லும் காரின் வேகத்தை மேலும் கூட்டினான்.....

வேகத்திலும் கோபத்திலும் சென்ற அவனின் வாகனம், தறிகெட்டு சென்று தானாய் நின்றது, டீசல் தீர்ந்தமையால்....

கோபமும், பாரமும் நெஞ்சை அழுத்த, கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது....

பார்வையை விழிநீர் மறைக்க, கண்களில் இருந்து நீர்  தானாய் நிரம்பி வழிந்தது.....

தன்னிரக்கம் நெஞ்சில் மேலோங்க, காரின் ஸ்டியரிங்கில் முகத்தை புதைத்தபடி, பெருங்குரலெடுத்து அழத்துவங்கினான், அவன் ....

சில மணிநேரங்களில், தன் கண்களை துடைத்து , காரில் இருந்து வெளியேறினான்.....

நடுநிசியானதால், ஆள்நடமாட்டம் அத்தெருவில் இல்லை......

யாருமற்ற சாலையில் அங்கும் இங்குமாய் அலைந்த படியும், கீழிருந்த கற்களை கால்களால் ஏத்தியபடியும், மனஉளைச்சலில் சிக்கி தவித்தான்.......

முழுவல் Where stories live. Discover now