அவர்கள் யாவரும் அறியா உண்மை என்னவென்றால், " ரோமியோவாகிய என் உள்ளம் ரோஸலினாகிய அனன்யாவிடம் உருகி கிடப்பது.... "காதல் செய்யும் மாயம் என பலர் சொல்ல கேட்டுருக்கிறேன்.....
அதில் பெரிய நம்பிக்கை எனக்கில்லை..... எதுவுமே தனக்கு நடக்கும் வரைக்கும் தான்.....
நடந்த பின்னே மற்றவர்களின் கூற்றும் உண்மையென தெரிந்துகொண்டேன்....
என்னிலும் என் காதல் எண்ணற்ற மாயங்கள் புரிந்தது......
டோராவின் தினசரி நடவடிக்கைளை கவனிப்பது, அவளுக்கு பிடித்தது, பிடிக்காதது என சித்துவின் மூலம் கண்டறிவது.....
தானே சிரிப்பது, சாதத்தில் கோலமிடுவது என நான் பண்ணும் அலப்பறைகள் எனக்கே தாங்காவண்ணம் வளர்ந்தன.....
என் நடவடிக்கைகளில் சிறிது வித்யாசத்தை உணர்ந்த, சித்து......
" மச்சி..... உனக்கு பச்ச டிரஸ் போடுறதுக்கான பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு... " என்றான்.....
அவன் சொல்வது எதுவும் விளங்காததால், " ஏன்டா.... அப்படி சொல்ற???? என்ன பச்ச டிரஸ்???? " என நான் சித்துவிடம் கேட்க......
"நான் அப்போவே சொன்னேன்டா......நடுராத்திரில மெலோடியச பியானோ வாசிக்காதான்னு..... இப்போ பாத்தியா.....
உன் பியானோ வாசிப்புல மயங்கி எந்த மோகினியோ உனக்குள்ள வந்து, உன்னோட நட்ட கழட்டி, பச்ச டிரஸ் போடவைக்க பிளான் போடவைக்க பிளான் பண்ணிருச்சு..... சீக்கிரமே உன்னைய கீழ்பாக்கத்துல போய் சேத்துரணும்டா....... " என சித்து சொல்லிமுடித்த சித்து அங்கிருந்து நகல...
"டேய்...... யாருக்கு பைத்தியம் பிடிச்சுருக்கு.... " என சொல்லிய நான்
அவனை துரத்த ஆரம்பிக்க.....ஓடியபடியே சித்து " உனக்கு தான்டா பைத்தியம் பிடிச்சுருக்கு..... அதுவும் சாதா பைத்தியம் இல்ல... மோகினி பைத்தியம் " என சொல்ல.....
"ஆமான்டா... எனக்கு பைத்தியம் தான்..... மோகினி பைத்தியம் இல்ல..... டோரா பைத்தியம் " என எனக்குள்ளே சொல்லிக்கொண்ட நான், முகமெல்லாம் பல்லாய் சிரித்தபடி, அவனை துரத்த ஆரம்பித்தேன்......
YOU ARE READING
முழுவல்
Spiritüelகாரிருள் சூழ்ந்திருக்க.... ரோஜாவின் வாசம் சுவாசமாய் இருக்க.... மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் நட்சத்திரமாய் மிளிரும் அவளின் முன் மண்டியிட்டு.... கணையாழியை கையில் ஏந்தியவாறு..... அவன் : "என்னய கல்யாணம் பண்ணிக்குறியா???....... " அவள் : "உன் ம...