அது ஒரு கனா காலம்

1.8K 110 79
                                    

அது ஒரு ரம்மியமான இரவு.....

காரிருள் கண்களை நிறைந்திருக்க......... ரோஜாவின் வாசம் சுவாசத்தை நிறைத்திருந்திருக்க..... வாசம் வந்த திசையினை நோக்கி அனிச்சையாக சென்றது அவள் கால்கள்......

மாடிப்படிகள் அவ்வாசனைக்கு வாயிலாய் அமைய.......சிறிதும் நிற்காமல் படிகளின் மேல் ஏறின அப்பாதங்கள்.....

வாசத்தின் மூலத்தை அடைந்தவுடன் நின்றன அப்பாதங்கள்.....

மெழுகுவர்த்திகள் மற்றும் முழுநிலா மட்டுமே அவ்விடத்திற்கு ஒளியூட்ட, கீழே முழுவதும் ரோஜா இதழ்கள் பரப்பப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிவப்பு நிற இதய வடிவிலான பலூன்கள் கட்டப்படும், தரையில் போடப்படும் இருந்தன. அங்கே ஒரு மேஜை மற்றும் இரு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.....

யாருக்காக இதெல்லாம் என அவள் யோசிக்கும் வேளையில்.... மெல்லிய இசை இசைக்கப்பட்டது..... வண்ணவிளக்குகளால் அவ்விடம் ஒளிர்ந்தது..... எங்கிருந்தோ வந்த இரு பெண்கள் அவளின் தலையில் மலர்வளையத்தை வைத்து அவளை முன்னே அழைத்து சென்றனர்.....

எங்கிருந்தோ வந்த நால்வர் அவ்விசைக்கு ஏற்ப நடனமாட துவங்கினர்......அந்நால்வர் விலக அவர்களின் பின்னிருந்து வந்தான் அவன்.... அந்நால்வரின் நடுவே நின்று அவர்களுடன் ஒரு சேர நடனமாட துவங்கினான்.......

பாடல் முடிந்ததும் சிலையென நின்ற அவளின் முன் , கைகளில் வைரம் பதித்த கணையாழியை ஏந்திய வண்ணம் மண்டியிட்டான் அவன்....

" என்ன கல்யாணம் பண்ணிக்குறியா??? அனன்யா " என்றான் அவன்...

"உன் மூஞ்சிய பாத்தாலே பத்திகுட்டு வருது சித்ததார்த், தயவுசெய்து இங்க இருந்து போயிரு " என கோபமாக கத்திவிட்டு சித்தார்த்தின் கையில் இருந்த கணையாழியை பறித்து வீசினாள் அனன்யா...... அவள் தலையில் இருந்த மலர்வளையத்தையும் அவன் முகத்தில் எரிந்துவிட்டு அவனை பார்வையினால் எரித்துவிட்டு வேகமாக வெளியேறினாள் அனன்யா.....

அவள் போவதையே பார்த்திருந்த சித்தார்த், ஒரு காலத்தில் தன்னையே சுத்தி வந்தவள்.... இன்று இவ்வாறு மாறியதேன்??? என்று எண்ணியபடி தன் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தான்...

முழுவல் Where stories live. Discover now