என் அப்பா வந்து, என்னை வீட்டுக்கு அழைத்து சென்ற பிறகே, என் உயிர் என்னிடம் திரும்பியது போல் இருந்தது.....
வீட்டுக்கு வந்தும் நான் பையை வைத்துக்கொண்டே சுற்றுவதை பார்த்த அப்பா,
"அப்படி என்ன அந்த பையில இருக்கு. யுவி?? " என கேட்க,
மீண்டும் பயம் தொற்றிகொள்ள "ஒன்னும் இல்லப்பா".... என்று எனதறைக்கு ஓடிவிட்டேன்......
எனதறையில் சென்று டோராவின் புகைப்படத்தை வெளியே எடுத்த நான், அதை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தேன்....
அப்பாவின் காலடியோசை கேட்க, அதை என் பையில் வைத்துவிட்டு, வேகமாய் மெத்தையில் அமர்ந்துகொண்டேன்.....
என் அப்பா, என்னை ஒரு முறை வினோதமாய் பார்த்துவிட்டு, மீண்டும் சென்றுவிட்டார்....
அன்றிரவு எனதறைக்கே உணவு வந்தது..... அப்பா வேலை நிமித்தமாக, அலுவலகம் சென்றிருந்தார்......
நான் "பவர் ரேஞ்சர்ஸ் " கார்ட்டூன் பார்த்து கொண்டே, டோராவின் படத்தை பார்த்து கொண்டிருந்தேன்....
மீண்டும் அதை என் பையில் வைத்துவிட்டு, அதை அணைத்தவாரே சோபாவிலே உறங்கிபோனேன்......
மறுநாள் காலை, எழுந்து பார்க்கும் போது....மெத்தையில் படுத்தபடி இருந்தேன்.....
என் மீது போர்வை போர்த்தப்பட்டிருந்தது..... என் அருகே அப்பா படுத்திருந்தார்...... என் பையானது மேஜை மீது வைக்கப்பட்டிருந்தது......
வேகமாக எழுந்த நான், அதை எடுத்து பார்க்க, அதில் டோராவின் படம் இருந்தது......
அதை மறைத்து வைக்க எண்ணிய நான், ஸ்டோர் ரூமில் வைத்துவிட்டு வந்து பார்க்க, அப்போதும் அப்பா உறங்கிக்கொண்டு தான் இருந்தார்.....
நிம்மதியுடன் கிளம்பிய, அன்று பள்ளிக்கு சென்றுவிட்டேன்......
அதன் பின் நான் டோராவிடம் சரியாக பேசுவதில்லை
சின்ன வயதில் பலருக்கு பல பொருட்கள் பிடிக்கும்....
YOU ARE READING
முழுவல்
Espiritualகாரிருள் சூழ்ந்திருக்க.... ரோஜாவின் வாசம் சுவாசமாய் இருக்க.... மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் நட்சத்திரமாய் மிளிரும் அவளின் முன் மண்டியிட்டு.... கணையாழியை கையில் ஏந்தியவாறு..... அவன் : "என்னய கல்யாணம் பண்ணிக்குறியா???....... " அவள் : "உன் ம...