நான் கோபத்தில் சிவந்து... அனுவை அடிக்க ஓங்கிய கையை, அந்தரத்தில் நிறுத்த....
"பளார் " என அனுவின் கன்னத்தில் ஒரு அடி விழுந்தது....
நான் யார் அடித்ததென பார்க்க.... அங்கே முருகன் மாமா, ரௌத்திரம் மிகுந்தவராய் காணப்பட்டார்.....
அனு அடிவாங்கிய அவளின் கன்னத்தை அவளது இடது கையால் தாங்கியவாறு , அவரை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.... சிறு வயதில் இருந்து யாரும் அவளை அடித்ததில்லை... இதுவே முதல் முறை....
"என்ன ரொம்ப பண்ணுற.... உனக்கு உக்காந்தா இடத்துல சோறு கிடைக்குதுல.... அந்த திமிரு தானே இப்படிலாம் பண்ண சொல்லுது..... உன்னயலாம் சோறு தண்ணி இல்லாம பட்னியா போட்டா தான் சரியா வருவ........ " என அனுவிடம் சினத்தில் சிவந்தவர்....
"பட்டம்மா இங்க வாங்க.... அவளுக்கு நாளைக்கு காலைல வர, சாப்பிட எதுவும் கொடுக்காதீங்க..... வயிறு காஞ்ச தான், சாப்பாடுடோட அருமை தெரியும் " என வேலையாளிடம் கட்டளையிட்டார்.....
"மாமா....அவ ஏதோ கோபத்துல..."
என நான் அவரை சாந்தமாக்க முயல....."நீ கொஞ்சம் நேரம் சும்மா இரு.....மயிலே... மயிலே...ன்னா... மயிலு இறகு போடாது...நான் பாத்துக்குறேன்".....என அவர் கோபம் என்னிடம் திரும்ப, நான் மௌனித்தேன்......
"நானும் பாத்துட்டே இருக்கேன்.... ரொம்ப ஓவரா பேசுற..... பர்த்டே பார்ட்டியையும் கேன்சல் பண்ண....கேக்க தூக்கி குப்பைல போட்ட.... இரண்டு நாளா யார்கிட்டயும் பேசல..... ரூம விட்டு வெளிய வரல....
அப்படி சித்தார்த் என்ன பண்ணிட்டானு இப்படி முறுக்கீட்டு தெரியுற???.......பாவம் அந்த யுவி பையன்... அவங்க அப்பா வேற ஊர்ல இல்ல... அவனுக்கு அடிப்பற்றுக்குறப்போ எப்படி அவன தனியா விட்டுட்டு வருவான்.....
உனக்கு பிடிக்கலைன்னா அவன் யார்கூடவும் பேசக்கூடாதா???.... பழக கூடாதா????......இவனை பாத்தா உனக்கு எப்படி தெரியுது..... "
"மாமா " என நான் இழுக்க...
"உன்னைய சும்மா இருன்னு சொன்னேன்.. ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டியா நீ "..... என மீண்டும் என்னிடம் பாய, நான் மௌனித்தேன்...
YOU ARE READING
முழுவல்
Spiritualeகாரிருள் சூழ்ந்திருக்க.... ரோஜாவின் வாசம் சுவாசமாய் இருக்க.... மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் நட்சத்திரமாய் மிளிரும் அவளின் முன் மண்டியிட்டு.... கணையாழியை கையில் ஏந்தியவாறு..... அவன் : "என்னய கல்யாணம் பண்ணிக்குறியா???....... " அவள் : "உன் ம...