அடுத்த நாள் காலை கதிரவன் தன் வேலையே செவ்வனே செய்திட கதிரவனின் தாக்கத்தால் கண்கள் கூச சிறிது சிறிதாய் நித்திரா தேவியின் அணைப்பிலிருந்து வெளியே வந்தாள் ஆதிரா. கண்களை கசக்கி எழுந்தவள் தன் அறையின் ஜன்னல் திரையை விளக்கி விட்டு மேலே வானில் இருக்கும் சூரியனை நோக்கி தன் அரைத்தூக்க பார்வையை செலுத்தியவள் ஒரு கையால் கண்ணை கசக்கிக்
கொண்டே மற்றொரு கையால் சல்யூட் அடித்தவள் "வணக்கம் தலைவா "என்று சூரியனுக்கு முதல் காலை வணக்கத்தை வைத்து விட்டு குளித்து விட்டு வந்தாள் .குளித்துவிட்டு வெளியே இரவாடையோடு வந்தவள் cupboardai திறந்து "என்ன போடலாம்" என்று அலச அவள் கையில் சிக்கியது ஒரு கருப்பு நிற சுடி .அதை எடுத்தவள் "ஹான் இது தான் perfectuh" என்று அதை தன் மேல் வைத்து கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தவள் ஒரு கையால் சூப்பர்டி ஆதி என்று கூறிவிட்டு அவளின் கன்னத்தை கிள்ளி தனக்கு தானே முத்தம் வைத்துக்கொண்டவள்"கருப்பு தான் எனக்கு புடுச்ச கலரு அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தௌஸண்ட் வாட்ஸ் பவரு"என்று பாடிக்கொண்டே அந்த சுடிதாரை அணிந்து தயாரானாள்.
பின் வெளியே வந்து தன் அன்னை தந்தையுடன் வழக்கம் போல் கதை அளந்துவிட்டு கல்லூரிக்கு சென்றவள் வாசலிலேயே தன் தோழி வேதித்யாவையும் கண்டுவிட இருவரும் கதை அளந்து கொண்டே வகுப்பை நோக்கி சென்றுகொண்டிருக்க அவர்களை "excuse மீ "என்ற ஒரு கம்பீரக்குரல் தடுத்து நிறுத்தியது .
அந்த குரலை வைத்தே அழைத்தது யாரென்று அறிந்து கொண்ட ஆதிராவிற்கு வழக்கம் போல் கை கால்கள் உதறலெடுக்க இதயத்துடிப்பு எகிற திரும்பியவள் கண்டது தன் எண்ணத்தை பொய் ஆக்காது அவனிற்கே உரிய கம்பீரத்தில் சற்றே உதட்டில் ஒரு சிறு புன்னகையுடன் இருந்த ஆதேஷை தான்.
அவன் அவர்களை அழைத்ததை அவள் கனவா நிஜமா என்பதை போல் பார்க்க வேதித்யாவோ அவன் அறியாது அவள் கரத்தை கிள்ளியவள் அவள் வலியில் லேசாய் அலற அவள் காதருகில் குனிந்தவள் "வாய கிளோஸ் பண்ணுடி "என்றுவிட்டு ஆதேஷிடம் திரும்பியவள் "என்ன ஆதேஷ் சொல்லுங்க "என்க