32

1.6K 121 98
                                    

பாசப்போராட்டத்தில் நனைந்திருந்த நால்வரையும் கலைத்தது ஓர் கைதட்டும் சத்தம் .நால்வரும் வாசல் பக்கம் திரும்பி பார்க்க அங்கே தனக்கு பின் இருபது காவலர்களுடன் தன் கொடூரமான முகம் தெரிய ஏளனமாய் புன்னகைத்தவாறு ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர் நீலகாந்தனும் மார்த்தாண்டனும் .

நீலகாந்தன் " சபாஷ் சபாஷ் நான் எழுப்பி இருந்த தடைகளை தாண்டி, எனது காவலர்களை வீழ்த்தி, அவர்களின் உடையை தரித்து ,எனது அரண்மனைக்குள் புகுந்து சிறைச்சாலையில் உனது உடன்பிறந்தாளுடன் உறவாடிக் கொண்டிருக்கிறாய் .
இளப்பமாய் கூறக்கூடாது உனது மதியை எண்ணி வியக்கிறேன்."என்க

மார்தாண்டனோ இளக்காரமாக தோணியில்" எனில் என்ன செய்ய உனது உடையினின்று வெளித்தெரிந்த வைக்கோலும் உனது முகம் விலகிய திரையில் உன் பெண்முகத்தை காட்டிக்கொடுத்த நீரும் உனக்கு வஞ்சகம் இழைத்துவிட்டதே சு சு சு சு ."என்க

ஆராதனாவின் புறம் திரும்பிய நீலகாந்தனோ அவன் தலையை தட்டி யோசிக்கும் பாவனை செய்தவன் "என்ன கூறினாய் என்ன கூறினாய் எனது இளவளும் என்னவனும் இவ்வரண்மனையை அடைந்தால் உன் தலை உன் உடலிலிருந்து கொய்யப்படும் என்று தானே கூறினாய் ?"என்று அருள்மொழி மற்றும் ஆதேஷின் புறம் காவலர்களை அனுப்ப அவர்களை இருபது காவலர்களும் அமுக்கி பிடித்துக்கொள்ள ஆராதனாவையும் ஆதிராவையும் இரு காவலர்கள் திமிர திமிர பிடித்துக்கொள்ள அருள்மொழியையும் ஆதேஷையும் மார்த்தாண்டனும் நீலகாந்தனும் ஒரே நேரத்தில் குத்த இருவர் வாயிலிருந்தும் ரத்தம் தெளித்தது.

அவர்கள் அடிவாங்குவதை பார்த்து இருவரும் துடிக்க ஏளனமாய் சிரித்த நீலகாந்தன் அவர்களை முறைக்கும் இருவரையும் கண்டு "என்ன ஏதேனும் மாயாஜாலம் புரிந்து வெளியேறலாம் என்று நினைத்தாயோ நேரம் தாழ்த்திவிட்டாயாடா இங்கு சிறை வாசலுக்கு நான் வந்த நொடியே மாயப்பொடியை இவ்வறையின் வாசலில் தூவி உனது மந்திர சக்திகள் அனைத்தையும் கட்டிவிட்டேன் இனி உன்னால் எந்த மாந்திரீகத்தையும் இவ்வறையிலிருந்து உபயோகிக்க முடியாது "என்று கூறியபடி மற்றொரு அரையை அவன் முகத்தில் வைத்தான் .

ஆதிரா(முடிவுற்றது)Where stories live. Discover now